சிறு துளி

வீட்டுக்கு ஒரு மரம் வரம்
புகைப் பழக்கத்தை விட்டுவிட்டால் பெறலாம்
நாளெல்லாம் நலம்?!.....

மரம் நட்டல் வளமாக வாழலாம்!!....
புகைப் பழக்கத்தை விட்டு விட்டால்
வாழ்வை நாளெல்லாம் எதிர் நின்று ஆளலாம்?!.....

புகைத்தால் சாவு நிச்சயம்!!...
புன்னகைத்தால் வாழ்வு சத்தியம்!!....

மூலிகை வாசம் உயிர் காக்கும்!!....
புகையிலை வாசம் உயிர் பலி கேட்கும்?!....

பூக்களை பறிக்காமல் விட்ட பெண்கள் இல்லை?!....
உயிரைப் பறிக்காமல் விட்ட புகையிலை இல்லை!!....

வாடி வாசலைத்தாண்டும் காளையும்
பாக்கெட்டிலிருந்து வெளியில் வரும் சிகிரெட்டும் ஒன்றுதான்?!......

எண்ணங்களை சிதறவிடாதீர்கள்!!....
புகையிலைக்கு அடிமையாகி உயிரை விடாதீர்கள்!!......

பூக்களின் வாசத்தில் சுவாசம் சுத்தமாகும்!!.....
புகையிலையின் வாசத்தில் உயிரே போகும்?!.....

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (3-May-15, 6:42 pm)
Tanglish : siru thuli
பார்வை : 209

மேலே