இன்பம் கொள்வீர்

சாவை எதிர்த்து முகம் சுளிப்பீர் - சொந்தத்
தேவை முடித்துத் துறக்கு முன்னே -இந்தத்
தீயிடை பூதவுடல் எரிபடவே முடியும்
வாழ்வை களிப்புறச் செய்திடுவீர்! - நம்
மாய நிலைக்கொரு வேடத்தையே தந்த
இட்ட தெய்வமதை வணங்கியிங்கு -நித்தம்
நேயம் கொள்வீர்! மனிதர் அனைவரும் ஒன்றென
கொண்டு இங்கு சிறந்திட இன்பம் கொள்வீர் !

எழுதியவர் : கருணா (29-May-15, 11:15 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 400

மேலே