கிழிஞ்ச சட்டையில் கிளியோபாட்ரா

மழை-
பொழிந்தாலும்
பொழியாவிட்டாலும்
உன்
அழகு பயிர்
வாடுவதே இல்லை !

நம்ம ஊர்
ஒற்றையடி பாதையாய்
உன் தேகம்.
அதில்-
அடிக்கடி பயணிக்கிறது!
என் பார்வைகள்!

உன் கூந்தலானது
பருத்தி விளையாத
கரிசக்காடு !
என்னை-
உயிரோடு
புதைக்க நினைக்கும்
சுடுகாடு!

உன் பார்வை
அது-
வெயில் விளையும்
பொட்டல் காடு

என் அழகு கிராமமே !

வேங்கையன் கோவிலில்
வேண்டிகொள்கிறேன்
நீ -
எனக்கு கிடைத்தால்
ஆடு பலியிடுவதாக !
கிடைக்காவிட்டால்
என்னை பலியிடுவதாக!

.....து.மனோகரன்

எழுதியவர் : து.மனோகரன் (19-Sep-15, 2:52 pm)
பார்வை : 216

மேலே