என்னவள் 8~~அர்ஷத்

~இனிப்பு
கடையில் ..நீ
தேகமெல்லாம்
எச்சில்
ஊறுகிறது
இனிப்பு
பண்டங்களுக்கு ....!!!

~சேற்றில்
இருந்தாலும்
தாமரை
அழகு தான் ...
நைட்டியில்
இருந்தாலும் -நீ
அழகிதான்...!!!

~இரவில்
பார்க்கும்
போதுதான்
நிலவழகு
எந்த
நேரம்
பார்க்கும்
போதும்... நீ
அழகு ...!!!

~சிதறி
கிடந்த
அழகு
மணிகளை
ஒன்றாக
கோர்க்கப்பட்ட
மாலை... நீ...!!!

~ஆய்வகத்தில்
நான்
டெ(டே )ஸ்ட்
செய்த
பொட்டாசியம் டை க்ரோமைடு
உன்னிதழ்கள் ...!!!

~நீ
நிறைகுடம்தானே
பிறகேன்
தளும்புகிறது
உன்னிடை...!!!

~ஆற்றிலுள்ள
அத்துணை
மீன்களும்
சிக்கும்...
வலையாக
உன் சேலை இருந்தால் ...!!!

~குழந்தைகளுக்கும்
பொம்மைகளுக்கும்
மட்டுமே
உரித்தான
சொத்தாக
உள்ளது
உன் கட்டியணைப்பு ...!!!

~ருசியான
உணவின்
முன்
பசிகொண்டவன்
போல
உன்முன்
நான்....!!!

~நிலவை
காட்டி
சோறு
ஊட்டுவது
போல
உன்னை
காட்டி
காதல்
ஊட்டுகிறேன்
என்
இதயத்திற்கு ...!!!

~என்
அகத்தில்
உள்ள
பிசுறுகளை
களைந்தெறியும்
அகவெட்டி
நீ ...!!!

~உன்
கன்னம்
வெட்க ஆலை
நானோ
தினமதற்கு
ஏங்கும் ஏழை ...!!!

எழுதியவர் : அர்ஷத் (19-Oct-15, 4:21 pm)
பார்வை : 208

மேலே