கட்டவிழ்ப்பு - ஆனந்தி

கன்னத் துவாரங்களில்  எல்லாம் 
காற்று அறைந்து போகிறது 
தலை மீதெல்லாம் பூக்களின் 
மழை இடைவிடாது பொழிகிறது 
தலை உயர்த்தி பார்க்கிறேன் 
ஊர்க்காரர்களின் அணிவகுப்பு 
கால் கட்டோடு தாத்தா 
எங்கே நால்வருடன் முன்னே 
செல்கிறார் இந்த இருட்டு வேளையில்.
தூரத்தில் நாய்களின் குறைப்பு 
இடைவிடாமல் ஒலிக்கிறது.
அம்மா அனாவசியமாய் 
அழைகிறார் இந்நேரத்தில் 
தலை குளிக்க.
தெரு விளக்கு விட்டு விட்டு 
எரிகிறது 
எந்நேரத்திலும் தாத்தா
கட்டவிழ்த்து வந்துவிட போகிறார் 
எனை உப்பு மூட்டை தூக்க 
என்று தெரியாமல் பாட்டி தலை விரி கோலமாய் வாசலில்.
திட்டு வாங்க போகிறார் தாத்தாவிடம்.

பின்குறிப்பு:

டிசம்பர்17....அன்று......கீற்று இதழில் வெளியான என்னுடைய கவிதை....

எழுதியவர் : ஆனந்தி.ரா (24-Dec-15, 12:20 pm)
பார்வை : 155

மேலே