தலை சாயும்

சந்தனமரத்தில்
செய்த கட்டுமரமா
நீ !
கஞ்சா செடியை
நட்டு வளர்க்கும் தோட்டமா
உன் கார்மேகக் கூந்தல்..!

நீ பூக்களை
முகர்ந்து பார்த்தால்
வீதியெங்கும்
நறுமணம் வீசுதடி..!

நண்பர்களிடம்
ஜாதிகள் பாராத
ஜாதிமல்லியே..!
தேய்பிறையன்று
வளர்பிறையாவது
உன் நகமல்லவா..!

பல தலைகளை
உன் வலையில்
விழவைத்த கலையே..!
தேயாத நிலவு
நீயல்லவா..!
தலை சாயாத
சிலையும் நீயல்லவா..!
-திரு

எழுதியவர் : திருமூர்த்தி (18-Jun-16, 12:57 am)
Tanglish : thalai sayum
பார்வை : 87

மேலே