பெண் பார்த்தேன்

ஒரு ரயில் பயனத்தின்போது நான் உட்கார்ந்தபடியே உறங்கிக்கொண்டிருந்தேன் கண்
விழித்து பார்த்தபோது அவளின் பாதம் என் கண்ணில் பட்டது என்ன ஒரு அழகு...
பாதமே இவ்வளவு அழகு என்றால் என்று எண்ணி அவளின் முகத்தை பார்க்க மெதுவாக என் பார்வையை சற்று மேலே செலுத்தினேன் வெளிர் நீல நிறத்தில் சுடிதார் அனிந்திருந்தாள்
துப்பட்டா சற்று மேலே நகர்ந்து அவளின் கழுத்தை மறைத்திருந்தது. அழகான பெண் எல்லா அம்சங்களும் ஒருங்கே அமைந்த ஓர் அழகிய தேவதையாக அவள் இருந்தாள்.
அவளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. ரயில் ஒரு சந்திப்பில் வந்து நின்றது காபி, டீ மற்றும் சில தின்பண்டங்கள் விற்கும் சிறு வியாபாரிகளின் கூக்குரல் ஒலிக்க பயணிகள் இறங்கி ஏறிக்கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களில் பச்சை சமிக்ஞை கிடைத்ததும் ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்வுகள் எதுவும் அறியாமல் அவள் சற்று சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். என் மனம் கற்பனை உலகில் சிறகடித்தது இவள் தான் நான் தேடி கொண்டிருக்கும் என் வாழ்க்கை துணை என்று என் மனம் உள்ளுக்குள் சொல்லியது. இவள் மட்டுமா அல்ல இவளுக்கு துணையாக வேறு எவராகிலும் உள்ளனரா என்றும் நான் பார்த்தேன் அவர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் விலாசம் அல்ல கைபேசி எண் பெறலாமா என்று யோசித்த நேரத்தில்...
எனக்குள் ஒரு பொறி தட்டியது உடனே என் கைபேசியை எடுத்து என் தமக்கையுடன் தெடர்புகொண்டு இவளை பற்றி பேச தொடங்கினேன் ஏனெனில் எனக்கு வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்கிறேன். ரயில் மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது அவள் விழித்து தன் உடையையும் உடமைகளையும் தொட்டு சரி செய்ய தொடங்கினாள்.
அடுத்த நிறுத்தத்தில் இறங்குவாள் போல என்று நினைத்து நானும் அதே நிறுத்தத்தில் இறங்கிவிட முடிவு செய்தேன். அடுத்த நிறுத்தம் வந்தது அவள் எழுந்தாள் நானும் எழுந்தேன். அவள் அந்த அழகிய தேவதை என்னிடம் பேச தொடங்கினாள் என்னங்க யாரது தயவுசெய்து நான் இறங்க எனக்கு உதவி செய்யவும் எனக்கு பார்வை கிடையாது என்றாள்... ஒரு நிமிடம் என் இதயத்தில் பூகம்பம் வெடித்தது போல் இருந்தது. நான் அவளை கை பிடித்து இறக்கி விட்டேன். அங்கே அவள் அப்பா காத்திருந்தார் அவளுக்காக... பிறகு எனக்கு தெரியவந்தது ஒரு பரிசோதனை கூடத்து விபத்தில் அவளுக்கு பார்வை பரிபோனதென்று. பிறகு நான் ஒரு தீர்க்கமான முடிவேடுத்தேன் அவளின் ஒப்பதலோடு அவளுக்கு நான் வாழ்நாள் முழுக்க கண்கண்ட கனவனாக இருக்க....

எழுதியவர் : செல்வமுத்து.M (9-Sep-16, 3:11 pm)
Tanglish : pen paarthaen
பார்வை : 730

மேலே