வள்ளியின் விழி பட்டு

வள்ளியின் விழி பட்டு...
============================================ருத்ரா


பார்வையை
கவண் கல் ஆக்கினாய்.
இந்த அப்பாவிக்கிளிகள்
அடிக்குப்பயந்து
தினைப்புலம் பக்கம் வரவே இல்லை.
பெண்ணே
அதோ பார்
உன் கவண்கல் விழிகள் எல்லாம்
இந்த வானம் நிறைந்து வழிந்ததில்
சூரியன் கூட தள்ளாடினான்.
கிழக்கு மேற்கு தெரியவில்லை.
அவனுக்கு உதவி செய்.
அவன் மேற்கில் மறையட்டும்.
அப்போது தான்
அந்தி மயக்கில்
உன் அமைதியான விழிகளை
பருகுவேன்.

=======================================

எழுதியவர் : ருத்ரா (13-Sep-16, 11:16 am)
பார்வை : 45

மேலே