நம்பிக்கை

உதிர்ந்து விடுவோம்
என்று,

பழுத்த இலைகள்

ஒருபொழுதும்
கவலைகொள்வதில்லை.

உதிர்ந்த பின்
மண்ணிற்கு

உரமாவோமென்று
தெரிந்ததாலோ?

நான் மட்டும் ஏன்
தளர வேண்டும்?

உயிரது உதிரும்
வரை

நம்பிக்கையை
விதைப்பேன்

எனை சுற்றி
உள்ளோர்க்கு

உள்ள உறுதியோடு
நடைபோட..,
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (28-Dec-16, 1:09 pm)
Tanglish : nambikkai
பார்வை : 230

மேலே