ஒரு காகிதத்தில் சில ஓவியங்கள்

ஒரு காகிதத்தில் சில ஓவியங்கள்!

வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினார் வள்ளலார்.
மழை மேகங்களே.... நீ !

வெளிச்சம் தேடியதில்
உருகிக் கிடக்கின்றன
மெழுகுத் துகள்கள் !

அருவியிலிருந்து நீர்
கீழே விழுந்தாலும்
நதியாக ஓடுகிறது !


நாயின்
வால் அசைவில்
நன்றியின் உணர்வு!

விதவை
விற்கும் கூடையில்
நிறைய மலர்கள்
அவள்
கூந்தலோ வெறுமை !

போகிப்பண்டிகையில்
பொசுக்க முடிவதில்லை
காதல் சின்னங்களை !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (11-Jan-17, 3:12 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 168

மேலே