இணைந்தும் இணையாமலும்

இணைந்தும் இணையாமலும்
இல்பொருளாய் இருப்பதற்கு
கணையாழி கொண்டுநாமும்
காதலிப்போம் இனிஇங்கே .


தண்டவாள வாழ்க்கைக்கு
தரமான நம்காதல்
செண்டாடும் சிறப்பாக .
செம்மையுறும் கற்புநெறி .


காதலிலே இணைந்தாலே
கல்யாண மேளதாளம்
மோதலின்றி நடந்தேறும் .
மொத்தமாக இணைவோமே !


திருமணமும் முடிந்தவுடன்
தீண்டிடுவாய் எனையும்நீ.
மருவுவாய் மாறிநானும்
மனையாளாய் காத்திருப்பேன் .


உடலின்பக் கவர்ச்சியிலே
உள்ளங்கள் புணராமல்
கடலின்பக் கனவுகளில்
காவியமும் படைப்பதெப்போ !!


உள்ளங்கள் புணர்ந்தாலே
உடலினையும் பார்ப்பதில்லை .
உண்மையானக் காதலிலே
உணர்வோமே எந்நாளும் !!!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Feb-17, 5:45 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 107

மேலே