களம் கண்ட காளைகளே

களம் கண்ட காளைகளே
விமர்சனங்களும் எதிர்வாதங்களும்
உங்களைத் தாக்கினாலும் – உங்கள்
உத்வேகம் ஒருபோதும் குறையாது!
உனராமல் உம்மை தூற்றுவோரும்
அறிவார் ஓர்நாள் உமது உன்மைப் போராட்டத்தை!
உடனிருப்போரும் உதாசிக்கலாம் – ஏனோ
அவர்களும் உங்களை உனரவில்லை!
மன்னித்திடுவாய் அவர்களையும் நீ
காலம் அவர்களையும் உனரப்படுத்தும்!
உன் வாழ்வில் பல அங்கத்தை பலர்
உரிமைக்காக உழைத்தாய்!
என்னற்ற எளியவரின் எதிர்காலம் காத்தாய்!
எத்துனையோ களம் கன்ட உமக்கு
இவைகள் ஒருபோதும் தடைக்கல்லாகாது
உனர்வுடனும் உன்மையுடனும் உன்னுடனிருந்த
பெருமை எனக்கு!
காளை காத்து வரும் சந்ததி காக்க போராடியவனே
என்றும் கடமைப்பட்டிறுக்கிறேன் உமக்கு!
வாய்ச்சொல்லில் நன்றி கூறி முடிக்க மனமில்லை!
தொடர்கிறேன் உன்னோடு!