இளைஞனின் குரல்

தேடித் தேடி அலைந்தேன்
வேலை கிடைக்காத என்று
நெஞ்சில் வலியுடன்
வேலையில்லாக் காரணத்தினால்
வீட்டில் கிடைத்த பொன்மொழிகள்
உருப்படாதவன்,சோம்பேறி...
ஆறுதல் சொல்ல கூட
ஆள் இன்றி தவிக்கிறேன்
ஒரு வேலைக்காக
இப்போது தான் தெரிந்தது
வீட்டில் நரகமும் உள்ளது என்று
நகைச்சவைக்காக கூட
என்னால்
சிரிக்க முடியவில்லை
மறந்தேன்
சிரிப்பு,புண்ணகை...
இழந்தேன்
அன்பு, பாசம்,மகிழ்ச்சி...
அறுசுவை உணவுகளை
இருசித்து உண்டேன் - முன்னாள்
ஒரு கையளவு சோறு கூட
இறங்கவில்லை - இன்னாள்
பசிக்காக உண்ட சோறும்
விஷமாக மாறியது
தொண்டைக்குழியில்
போராடிப் போராடித் தோற்றுப்போகிறேன்
வேலையிடம்
எனக்கு ஆறுதல் சொல்ல
என் கண்ணீர் மட்டுமே
நான் அதிகம்
செலவலிப்பது
என் கண்ணீர் மட்டுமே எச்சை சோறு வாங்கி உன்னும் பிச்சைக்காரனின் சந்தோசம் கூட இல்லை என்னிடம்
இன்றும் செல்கிறேன்
நெஞ்சில் வலியுடன்
இன்றாவது வேலைக்கிடைக்மென
வேலைத்தேடி......