அறுபது வயது காதல்

கணவனின் ஒற்றை நரை முடியை,
வலிக்காமல் பிடிங்கி எறிகிறாள்.
சட்டை அணியும் போது,
பொத்தான்களுடன் மல்லுக்கட்டி சரி செய்கிறாள்..
கண்ணாடி முன்பு வழித்து தலை சீவும் போது,
கேசங்களை கலைத்து விட்டு இயல்பாக்கி விடுகிறாள்..
சாப்பாடு பறிமாறும் போது,
பிடித்த பதார்த்தங்களில் ஒன்றை அதிகமாய் தட்டில் எடுத்து வைக்கிறாள்..
வீட்டை விட்டு செல்கையில் வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு,
திரும்ப வரும் வரை நினைவுகளில் மூழ்கி வாசல் பார்க்கிறாள்..

அறுபது வயதானாலும் மனைவியின் காதலுக்கு மட்டும்,
இளமை கூடி கொண்டே செல்வதன் ரகசியம் என்னவோ..

எழுதியவர் : சையது சேக் (31-Aug-17, 5:14 pm)
பார்வை : 197

மேலே