கடவுள் வேண்டாக் கட்சிகள்

(ஆசிரியப்பா)

ஓடத் தில்நின் றோட்டைப் போடுவாய்
ஓடம் தமிழகம் ஓடுபவைக் கட்சிகள்
ஓட மதில்நீ ஓட்டை போட்டால்
ஓடத் தில்போ டுமோட்டை யாலே
ஓடம் விட்டுநீ ஓடி மறைவாய்
ஓடம் தென்னா டுடையசி வநாடு
எவர்புனி தநீரென எக்குளம் மூழ்கினார்
எவர்குளித் தார்அவர் எதற்கு என்பதேன் ?
கடவுளி லாஊ ரிலாநீ கதைகிறாய்?
நுனிமரம் அமர்ந்து தனிக்கிளை வெட்டநீ
நுணலாம் கனல்தமி ழரல்ல புரியுமா?
முருகுத் தொழும்தமி ழர்தேவை உருகலேன்
முருகையும் சிவனும் தொழநிந் திப்பாய்
கிருத்துவ ஆலயக் கிருத்துவை ஏத்துவாய்
மாலைக் கஞ்சியை மசூதியில் குடிப்பாய்
ஏமாற் றிசிரிக் கவைத்தது போதும்
அரசியல் எத்தர் எத்தனைப் பாருமே !!!


--- ராஜ பழம் நீ (21-Sep-2017)

எழுதியவர் : பழனிராஜன் (21-Sep-17, 11:19 am)
பார்வை : 280

மேலே