நம் காதல்

என்னை நினைத்து
அழுதது போதும்
உன் கண்ணீரை வீணாக்காதே
கண்களை துடைத்துக்கொள்.

உன்னோடான இத்தனை
வருட என் காதல்
தேனினும் தேனாய் இனித்தது
இறுதி வரையுன் அன்பு
இல்லாத நிலையை எண்ணுகையில் என் நெஞ்ச
துடிப்பு நிற்கிறதேயடா.

நானுனை நீங்கியதும் உன்
வாழ்வது முடிந்திடாது-நீ
ஓர் மூலையில் முடங்கிராது
புறப்படு முன்னேற புறப்படு.
சிகரத்தை அடைய புறப்படு.

உனக்கான லட்சியப் பாதையில்
வீர நடைபோடு உன்னுள்
இருக்கும் என் நினைவிற்கு
விடை கொடுத்திடு.

நீ துயருறும் வேளைகளில்
நான் வருவேன்
நினைவாய்,நிழலாய் சுவாசமாய் -உன்
துயர் துடைக்க.

முதற்காதலை மறப்பதென்பது
சுலபமல்ல - அதுவுன்
வாழ்க்கைக்கு இனி அழகல்ல
இது உன் தோல்வியே அல்ல.

நீயொருவளை மணந்தாலும்
நானொருவனை மணந்தாலும்
நெஞ்சத்தின் ஓர் மூலையில்
மண்டிக் கிடக்குமடா
என்றென்றைக்கும் நம் காதல்

---- பெ.பரிதி காமராஜ்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (23-Nov-17, 10:26 pm)
Tanglish : nam kaadhal
பார்வை : 385

மேலே