என் நினைவு
திங்கள் முதல் நாளாம்
பள்ளி.
பள்ளியோடு சேர்ந்து பயமும்
கிளம்பியது
அரைகால் சட்டை.
துவைத்ததை
உதறி எடுத்த
மேல்சட்டை
பக்குவமாய் பசியாற பக்கத்து வீட்டு
பழையசோறும்
முந்தானை முடிச்சியில் சிக்கிய
காசும்
அன்னையிடம் வாங்கிய ஒரு ரூபாய்
நாணயமும்
நினைவாய் ஒடும் என் அன்னையின்
முகம்
காணும் போது...
என்றும் அன்புடன் நாகங்குடி க.தி.வெங்கட்கோபி