கொட்டுகிறது பணத்தை
மாதா,பிதா,குரு, தெய்வமென
முன்னோர்கள் அன்று
கற்று கொடுத்தார்கள்,
கற்ற மனிதன், மனிதனை
மதித்து வாழ்ந்தான்
மனிதனும் தெய்வமானான்
கால ஓட்டத்தில்
கலிகாலம் உருமாறியது—இன்று
கற்று தரும் கல்வியோ
பணம், பட்டம், பதவி தான்
உயிர்வாழ தேவையென்றது
உணர்ந்தது பட்டறிவும்
பணத்துக்கு அலையும் பதவியாளர்
பார்வை தன்னலமானதால்
பலனின்றி தடுமாறும்
பாமர மக்கள் படும்பாடு
புண்ணில் வேல்
பாய்ச்சிய கதை போலானது
காந்தியின் படம் அன்று
கைகொடுத்தது ஓட்டு கேட்க,
காந்தியின் பணநோட்டு இன்று
கறைபட்டது அரசியலால்,
கொடிகட்டி பறக்கும் ஊழல்
கொட்டுகிறது பணத்தை