தூங்கியது போதும்

உன்
உயிரையே
உணவாய்
ஊட்டி என்
உடலையும் வளர்த்தாய்......

கருவறையில்
கவலை
ஏதுமின்றி
இருந்தேன்....
என்
கண்களில்
கண்ணீர் வடிய
நீ
இன்று
கல்லறை சென்று
தூங்குவது
ஏன்.............

மீண்டும்
எழுந்து வந்து
என்னை
உன்
மடியில்
வை தாயே.......

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (13-Jun-18, 9:18 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 593

மேலே