உயிரே போகாதே
என் உயிரே போகாதே...
மௌனம் கலைத்து பேச ஏன் தயங்குகிறாய்?
உன் வார்த்தை கேட்காமல் அசைவற்று இருக்கிறேன்...
பார்வையை திருப்பி மன உறுதியை ஏன் அசைக்கிறாய்?
நீ பார்க்கணும்னு பதறித் துடிக்கிறேன்...
உன் நிழலும் ஏன் என்னை விலகிப் போகிறது?
உன் அருகாமை இல்லாமல் குழம்பி தவிக்கிறேன்...
நீ இருக்கும் திசையை சொல்ல மறுப்பது ஏன்?
உன் மூச்சுக்காற்றில் சுவாசம்பெற்று காத்திருப்பேன்...