என் உறவே
தகப்பனுக்கு நிகரான தகப்பனும்....!!!!
தாய்க்கு நிகரான தாயுமாய் .... !!!
நித்தம் நீ என்னை கவனிக்கையில்
என் கண்கள் கலங்குவதேனோ....???
எல்லாம் செய்யும் எனக்கு...!!!
என்றோ ஒரு நாள் உன்னை விட்டு பிரியும் நாளினை எப்படி நான் கடக்க...!!!
அண்ணன் ஆக மட்டுமில்லாமல்...... !!!!
சண்டையிட்டு சமதானம் கொள்வதில் நண்பனாய்....!!!!!
பெரிய அறிவுரை சொல்லுவதில் மூத்தவனாய்..!!!
எத்தனை வயது ஆனாலும்...!!!!
பார்க்கும் நேரம் எல்லாம் என் தலையில் கொட்டி...!!!!
என்னிடமும் அம்மாவிடமும் திட்டுவாங்காமல் தூங்கியதில்லை நீ....!!!!
அப்பா அடிக்கும் போதும்.... !!!
அம்மா திட்டும் போதும்...!!!!
அரவணைக்கும் உன் கை...!!!!
காணாமல் போனதன் விளைவு...???
அம்மா தலைவாரி முடிக்கையில்...!!!
என் தலைமுடியை இழுத்து சண்டையிடுவாய்....!!!!
எத்தனை நாட்கள் நான் உன்னிடம் கடிந்து கொண்டேன் அண்ணா...!!!
ஆயிரம் ஆயிரம் சண்டை இட்டாலும்...!!!!
அரை நொடியில் மறைந்து போகும் மாயம் தான் யார் அறிவார்...???
உனக்கு பிடித்த உணவினை அம்மா சமைக்கும் போது...!!!!
அம்மாவோடு நானும் கண்ணீரில் கரைகிறேனே...!!!
உனக்கு பிடித்த உணவுகள் கூட எனக்கு பிடிக்குது அண்ணா...!!!
எத்தனை ஆண்டுகள் கழித்து நீ வந்தாலும் உன்னிடம் இனி செல்ல சண்டையிடாது....
அன்பால் அரவணைப்பால்.....!!!!
இன்னொரு அன்னையாகவே நான்
என் உயிருள்ளவரை உன்னை பாதுக்காப்பேன்...!!!
அன்று நீ அடித்த அடிகள் என்ன வலிக்க செய்ததால் நான் அழுதேன்....!!!
இன்று அடிக்க கூட நீ இல்லாமல் என்னையரியாமல் கண்ணில் நீர் வழிகிறது...!!!
உன் வரவை நோக்கி என்றும் நான்...!!!
#அண்ணன் தங்கை