சேவை

ஒரு பெரிய மனுஷன் சாகக் கிடந்தார். ரொம்பவும் அழுதார்.
"ஏன் அழறீங்க?"ன்னு கேட்டாங்க சுத்தி இருந்தவங்க.
"நான் சாகறதுக்காக கவலைப்படல... நான் போனதுக்கப்புறம் நான் நம்ம ஜனங்களுக்கு இதுவரைக்கும் செஞ்சிட்டு வந்த சேவையை இனிமே யாரு செய்யப் போறாங்க...? யாராலே அது முடியும்? அத நெனச்சுதான் அழறேன்!" அப்படின்னார்.
ஒருத்தர் முன்னாடி வந்தார். "அதுக்காக நீங்க கவலைப்படாதீங்க... உங்க சேவையை தொடர்ந்து செய்ய என்னை மாதிரி இளைஞர் பட்டாளம் தயாரா இருக்கு... இருந்தாலும் எங்க கவல என்னன்னா..." அப்படின்னு இழுத்தார்.
"என்ன?" ன்னு கேட்டார் அவர்.
"நீங்க இதுவரைக்கும் என்ன சேவை செஞ்சிகிட்டு வந்தீங்க? அதுதான் எங்களுக்கும் இன்னமும் புரியாத புதிரா இருக்கு!" அப்படின்னார்.

எழுதியவர் : (22-Feb-20, 1:56 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sevai
பார்வை : 70

மேலே