அவள் நாணம்
நாணய மானவள் அவள் ஆனால்
நாணம் அறியாதவள் ஆனால்
என்னை என் தாயோடு பார்க்க
பெண்ணிற்கே உரித்தான நாணம் ஆட்கொள்ள
அவளையே அறியாமல் தலை குனிந்தாள்
காலின் கட்டை விரலால் மண்ணில்
கோலமாக்கினாள் தன் மனதை