கோவிட் கால கொலைகள்

வேளியோட்டம் தடைப்பட்ட போதும்
மனிதா உன் மாய செயல்லோட்டம் நிற்கவில்லையே
மண்ணில் விதைத்திட முடியா நிலையிலும்
சமுக ஊடகத்தில் உழுதிட துணிந்தாயே
உண்மையும் பொய்மையும் அள்ளித் தெளித்தாயே

மனிதம் மறந்துப் போனால் மண்ணில்
புனிதம் இல்லை
இதயம் விட்டு வேரிடத்தில் எங்கும்
இறைவன் இல்லை
நாகரிக மானிடனின்
நஞ்சுக் கொண்ட மனதால்
உதிர்ந்தன சில உயிர்கள்
உருக்குலைந்தது மானிட நியதிகள்

எழுதியவர் : தாமரை முனுசாமி (3-Dec-20, 3:23 pm)
சேர்த்தது : தாமரை
பார்வை : 272

மேலே