இலட்சியம் இல்லை நம்மில்

காலப் புயலில் பஞ்சுகள்;
விதி அலையில் துருப்புகள்;
மாற்றமெனும் மந்திரவாதியின்
கைப்பொம்மைகள் நாம்.
மதிப்பீடுகளின் புரட்சிகளில்
நூலறுந்த பட்டங்கள்.
இலட்சியம் இல்லை நம்மில்.
சமுதாய நதியில்
எதிர் நீச்சலிடும்
சக்தியும் சித்தமுமில்லை.
வழியோரப் புற்களாய்
வாழ்ந்து மடிகிறோம்i.
விட்டில்களாய் சூன்ய
விளக்கை சுற்றுகிறோம்.
சொந்த வீட்டுக்கே
சில வேளைகளில்
அகதிகளாகிறோம்.

எழுதியவர் : அமல்.சி.தேவ் (5-Mar-21, 3:13 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 42

மேலே