காதல் நாயகன்
காதலனே கண்ணீர் கடலில் இறங்கி விட்டாய்
காப்பாற்ற ஆள் இல்லாமல் தவிக்க விட்டாய்
காதல் தேவதையே என அழைத்தாய்
கண்ணுக்கு தெரியாமல் மறைந்தாய்
காதல் வார்த்தையால் என்னை கலங்க வைத்தாய்
கொஞ்சி பேசி என்னை சிரிக்க வைத்தாய்
பேசாமல் என்னை பதற வைத்தாய்
எங்கும் உன்னையே தேட விட்டாய்
நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என புரிய வைத்தாய்
காதலனே நீ தான் என் உயிர் என நினைக்க வைத்தாய்