முடிவில்லாமல் தொலைவாகுதே

வாழும்நான் இதமாக வாழ்கிறேனே இனி இருள் என்றான பின்னும்...

நாளும்நான் காத்திருப்பதற்காக
காலம்தான் இனி பதில் சொல்லும்...

அவள் கண்பாவைகள் உதிரும் மலர்ந்தும் மலராமலும்...
அவள் கால்பாதங்கள் அலையும் அங்கும் இங்கும்...

தூரம் தள்ளி நின்று அனுதினம் அதனை ரசித்து! சித்தம் மகிழ்ந்து! நித்தம் கரைந்து!
தனியெ தவிக்குது இதயம்!...

இருந்தும் இல்லை என்பதாலெ
போகும் பாதை போகபோக முடிவில்லாம தொலைவாகுதே....

ஒத்த உசுரு தன்னாலே
வட்டமடிக்குது உந்தன் பின்னாலே
வண்ணப்பூவைக் கண்டாலே
வட்டமிடும்
வண்ணத்துப்பூச்சி போல...

எழுதியவர் : BARATHRAJ M (3-Aug-21, 8:14 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 220

மேலே