என் பேச்சு

மேடை மீது ஏறி நின்றால்
அடாது பொழியும்
மழையைப்போல்
விடாது மணிகணக்கில்
பேசுவேன்

ஆனால்

என் கண்மணியே
உன்னை கண்டு விட்டால்
என் பேச்சு
மூர்ச்சையாகி விடுகிறது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Nov-21, 6:49 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en pechu
பார்வை : 736

மேலே