அணைக்க ஓடுது மனம்

நேரிசை வெண்பா

ஊடல் கொளநான் ஒதுங்க மனமோடி
பாட நெருங்கிற் றவரையும் -- பாடம்
புகட்ட நினைத்து ஒதுங்க மனமோ
அகலா வணைக்கோடும் பார்

அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது
அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல்
அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத்
தழுவினேன்.

குறள். 9/18

எழுதியவர் : பழனி ராஜன் (22-Dec-21, 10:20 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 83

மேலே