தென்றல்
உலகில் உள்ள அனைத்து பூக்களின்
வாசங்களும் சற்று குறைவு தான்.
உந்தன் பொன்மேனி வாசனையின் முன்..!
நீர் இன்றி அமையாது இவ்வுலகம்.
நீ இன்றி அமையாது என் உலகம்.
வனங்களில் தென்றலை காணவில்லையாம்
மரங்கள் என்னிடம் சொன்னது.
நான் எப்படி சொல்வது!
தென்றல் என்னுடன் இருப்பதை...!