காதல் புது வெளிச்சம் 💞❤️

ஏன் பிறந்தேன் என நினைக்கும்

போது

இரவுக்கு வெளிச்சம் தரும் நிலவை

போல்

என் விழியில் வந்து விழுந்தாய்

இதயத்தின் உள்ளே மெல்ல மெல்ல

நுழைந்தாய்

புது வார்த்தை சொல்ல வந்தாய்

காதலை எனக்கு புது கவிதையாய்

தந்தாய்

என் கனவுகளை உன் நெஞ்சில்

சுமந்தாய்

உன் வாழ்வுக்கு அர்த்தம் நான்

என சொன்னாய்

திருமண உறவில் என்னை

இணைத்தாய்

காலம் எல்லாம் சுமை என

நினைக்காமல் சுகமாகவே என்னை

சுமக்கிறாய்

எழுதியவர் : தாரா (23-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 131

மேலே