அமர்ந்த விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

வளர்நகர் தாம்பரத்தில் வந்தமர் வல்லான்
தளராத இன்பம் தருவான் - வளவன்
அமர்ந்த விநாயகனை அன்றாடம் எண்ண
நமதுவினை தீருமே நன்று! 1

அமர்ந்த விநாயகனின் ஆனந்தத் தோற்றம்
நமது மனதிலேநின் றாட - நமக்கிது
வாய்ப்பாக நாமவனை வாழ்த்தி வணங்குவோம்;
தாய்போலக் காப்பான் கனிந்து! 2

அமர்ந்த விநாயகனின் ஆனந்தத் தோற்றம்
நமது மனதிலேநின் றாட - நமக்கிதுவே
நல்ல சமயமென நாமவனைப் பற்றுவோம்
வல்லவனும் வாழ்த்துவான் வந்து! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-22, 3:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே