காந்தி மஹான்

காந்தி மஹான்

வட்ட கண்ணாடிக்குள் ஒரு வலிமையான கண்கள்
வளைந்த தடி பிடித்து நடக்கும் வைர நெஞ்சம்
வன்முறையை எதிர்த்து போராடிய அகிம்சா வாதி
வந்தே மாதிரத்தை மக்களிடம் மந்திரமாகிய முனிவர்
வாய்மையை பேசி வன்மையை சாடிய மகான்
வர்த்தகம் செய்ய வந்து வன்மையை விதைத்தவரை
வழி அனுப்ப வேண்டும் என ஒரே குறிக்கோளுடன்
வாழும் நாட்கள் யாவையும் நாட்டிற்கு சுதந்திரம் பெற
வழிகள் அமைப்பதிலேயே கழித்து எதிர்ச்சியை மூட்டி
வெள்ளையனே வெளியேறு என கோஷமிட்டு போராடி
சுதந்திரம் நாம் பெற செய்த தேசத்தந்தை மறைந்த
இத்தினத்தில் அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவோம்

எழுதியவர் : கே என் ராம் (22-Jan-23, 11:04 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 26

மேலே