தாமதம்
இன்னும் தாமதமாகிக்
கொண்டிருந்தது
நீ வரவில்லை
வாசல் வழிய
முகப்பு ஒளியையும்
வழி நெடுக
மலர்களையும்
தூவி வைத்துள்ளேன் இன்று
நீ வரவில்லை
வெயிலும்
மழையும்
குளிருமாக
காலம் உருமாறிக்
கொண்டிருந்தும்
நீ வரவில்லை
பொறுத்தது போதுமென
பதறியெழுந்து
சாலைகள்
மரங்கள்
தாவரங்களை
கடந்து
உன்னக்காண
ஓடோடி வருகிறேன்
நிலமெங்கும் இடம்
நிறைந்திருக்க
அதாளத்தில்
ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறாய்
அன்பே
மூச்சு விட முடிகின்றதா
உன்னால்?