பூலோக சொர்க்கவாசல்

மண்ணில் தோன்றிய உயிர்களில்
முதன்மையானது தாவரங்கள்,
மூதாதையர்களைப்போல்-அவைகள்
பின்னால் தோன்றி வாழும்
பறவைகள், விலங்குகள், மனிதர்களுக்கு
தேவையான உயிர்க் காற்று, உணவு
தந்து காப்பது மரங்களும்,
தாவரங்களும் தான்
நன்றி மறக்காத தெய்வங்கள்

புவியில் வாழும் உயிர்களுக்கு
பசுமை நிறைந்தத் தாவரங்கள்
மன அமைதியையும்
மகிழ்வையும் தந்து காப்பதும்,
சூரியவெப்பத்தைத் தடுத்து உயிர்களுக்குக்
குளிர்ச்சியையும், ஆற்றலையும்
கொடுத்துக் காக்கும்
பசுமை வெளிகள்
பூலோக சொர்க்கவாசல்

எழுதியவர் : கோ. கணபதி. (5-Mar-23, 5:25 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 25

மேலே