மனமே ஓ மனமே
"மனமே ! மனமே ! நிலையாய் இரு
என்னை மட்டும் தள்ளாதிரு !
உலகைச் சுற்ற உள்ளமாயிரு !
உன்னைச் சுற்ற உலகமாயிரு !
மனமே ! மனமே ! நிலையாய் இரு !
உயிரை என்றும் விலக்காதிரு !
உறவால் என்றும் உயிரோடிரு !
கண்ணீர் பொங்கும் வேளையில்
இருளும் ஒளியும் கலந்து பாயுமோ !
பாயும் நதியில் உன்னைத் தெளித்தேன்
தெளிந்த ஓடையில் நெஞ்சங்கள் மிதக்கும் !"