மானன் என்றதன் மாட்சி கொள்வரால் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(தேமா கூவிளம் மா கூவிளம்)
ஞானன் என்பதும் நல்லன் என்பதும்
தானன் என்பதும் தவத்தன் என்பதும்
தீனன் இல்லெனத் தீயன் இல்லெனல்
மானன் என்றதன் மாட்சி கொள்வரால்!
- வ.க.கன்னியப்பன்
சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!
சீர்களை கண்டபடி வகையுளி செய்தல் கூடாது.