இமைக் குற்றம் கண்ணுக்கு தெரியாது

தன்பிள்ளை தென்னம்பிள்ளை
தவறேதும் செய்ய வாய்ப்பில்லை!

ஊரார் பிள்ளை உதவாக்கரைபிள்ளை
ஊனக்கண்ணால் யாவும் தொல்லை!!

உறங்கும் மனதை உசுப்பிக்கேட்காதவரை
உண்மை என்றும் சபை ஏறுவதில்லை!

புரையோடி போன கண்களால்
இமைக் குற்றம் கண்ணுக்கு தெரிவதுமில்லை!!

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (28-Aug-24, 4:41 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 49

மேலே