எம் தேசம்

ஏர் உழுத பூமியம்மா --- இன்று
போர் உழுது புண்ணாகிப்போச்சு !...
நீர் பாய்ந்த வரப்புகளோ
செந்நீர் பாய்ந்த கறையாச்சு.......
நெல் விளைந்த சோலையெல்லாம்
செல் விழுந்த காடாச்சு.......
பொன் விளைந்த பூமியம்மா -- இதில்
மனித ஊன் சிதறிப்போனதம்மா....
திக்கற்ற நிலையில் திண்றித்தவிக்கும்
எம்குல மக்களின் விடியல்தான் எப்போது???????

எழுதியவர் : nilapen (29-Feb-12, 11:06 pm)
பார்வை : 343

மேலே