எம்மொழி செம்மொழி!

தரணி தலைக்கும் முன்பே!
தலையெடுத்த
தமிழ் மொழியே!
தமிழ் இனமே!
வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து!
வான்புகழ் கொண்ட தவமொழியே!
தன்னை நாடி வந்த கவிஞருக்கெல்லாம்!
தேனருவி தந்த கவிமொழியே!
தேடிவந்த அறிஞருக்கெல்லாம்!
அடைக்கலம் தந்த அருள் மொழியே!
தனித்துவத்தால் தரணியாளும்
எம்மொழியே!
என்னை ஆட்கொண்ட
செம்மொழியே!
செருக்குடன் சொல்வேன்!
எம்மொழி செம்மொழி!
எம்மொழி செம்மொழி!
எம்மொழி செம்மொழி!

எழுதியவர் : குணசேகரன்.K (1-Mar-12, 1:09 am)
பார்வை : 2452

மேலே