உனக்கு தெரியாமல் போனதடி காதல் 555

பெண்ணே.....

காணாமல் கண்ணீர் வடிக்கும்
என் கண்களுக்கு...

எப்படி புரிய வைப்பேன்...

அவள் (நீ )

கலைந்த கனவு என்று...

அள்ளிப் பருக முடியாமல்
ஆர்பரிக்கும்...

என் இதழ்களுக்கு,
எப்படி புரிய வைப்பேன்...?

அவள் (நீ )

கானல் நீர் என்று...

அணைக்கத் துடிக்கும்
என் கரங்களுக்கு...

எப்படி புரிய வைப்பேன்...?

அவள் (நீ )

அழகான வானம் என்று...

நினைத்து வாடும்
என் உள்ளத்துக்கு...

எப்படி புரிய வைப்பேன்...?

அவள் (நீ )

உயரே பறந்து சென்ற
பறவை என்று...

புரிய வைக்க

புதிய வழிகள்

தேடுகிறேன்...

புதிய காதல் வாழ்க்கையில் ...

அனாதையாய் கிடக்கிறது...

எனது அலை பேசி
என்னை போலவே...

அவளது (உன் )

அழைப்பு இல்லாமல்...

மறைக்கப் பார்த்தாலும்
மறையாத
உணர்வுகள்...

காதலும்...

காமமும்...

மை இல்லாத
பேனா எழுதும்...

எழுத்துகளைப் போல்...

உனக்கு தெரியாமல் போனதடி..

என் கவிதைகளும் காதலும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Mar-12, 3:09 pm)
பார்வை : 362

மேலே