ஏழ்மையின் இரகசியம்

கோடி ரூபாய் வீட்டை கட்டி கொடுத்தான்,
கோணி பைதான் அவனுக்கு, வீடாகி போனது - கட்டிட தொழிலாளிக்கு


தலைக்கு மேல்தான் வேலை, தரையில் அமர்ந்து தான் செய்ய வேண்டும் - சவர தொழிலாளிக்கு.

அரசாங்க உத்யோகம் தான் - ஆனால் அணிவதற்க்கு சட்டை கூட இல்லை - சாக்கடை தொழிலாளிக்கு.


நட்சத்திர உணவகம் தான்,
செய்கின்றபணியோ, எச்சில் இலை எடுப்பது,


எழையின் முதுகு, நாணலாய் வளைகிறது, முதலாளித்துவம, மூங்கிலாய் வளர்கிறது.


ஏழை வர்த்தகம் எங்கே செல்லும்.
சமத்துவச் செடியினை யார் வளர்ப்பது ?


முதலாளி வர்க்கத்தை யார் ஓழிப்பது ?
இவைகள் தொலைந்த பின்பு,
உழைப்பாளி வர்க்கத்தை,
ஒளிபெறச் செய்வோம்.

எழுதியவர் : ஜெறின் (31-May-12, 12:24 pm)
சேர்த்தது : Jerin Ross (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 246

மேலே