சுவாதிகுணசேகரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுவாதிகுணசேகரன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Apr-2020
பார்த்தவர்கள்:  615
புள்ளி:  46

என் படைப்புகள்
சுவாதிகுணசேகரன் செய்திகள்
சுவாதிகுணசேகரன் - ஷிபாதௌபீஃக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2021 1:31 am

விழி மீளா தவத்தில்,
பசியோடு ரீங்காரமிட்டவல்,
தவநிலையலே பசியாறிட,
மீண்டும் மீண்டும் உறங்குகிறாள்,
என் குட்டி தேவதை !!

-ஷிபாதௌபீஃக்

மேலும்

ஆமாம் அவர்களின் நிம்மதியான உலகம் அது பூமியில் வந்த பின்பு அவர்களுக்கு கிடைக்கும் மிகவும் அமைதியான வாழ்வு அது ❤️❤️ 31-Jul-2021 3:35 am
அவர்களின் உலகம் தனித்துவமானது ,தேவதைகளுடன் விளையாண்டு கொண்டிருப்பார்கள். பொய்யில்லை , போட்டியில்லை ,பொறாமையில்லை வஞ்சகம் இல்லை, அழகான உலகம் ,அதனால்தான் குழந்தைகள் தூக்கத்திலேயே இருப்பார்கள் . 30-Jul-2021 1:18 pm
சுவாதிகுணசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2021 8:52 am

சுற்றமது சூழ்ந்திருக்க

சுபமதுவும் நிறைந்திருக்க...

இனியதொரு இந்நாளில்

இல்வாழ்வை சிறப்பிக்க

உறவுகள் அத்தனையும்

உற்ற நண்பர்கள் அனைவருமே

நல் ஆசிதனையே அறமாய் தந்திடவும்...

வாழ்த்து அது ஒன்றினையே வரமாக வழங்கிடவும்...

இந்நாளை சிறப்பித்து

இத்திருநாளை மெருகேற்ற -தங்கள்

நல் வருகை தனை வரவேற்க காத்திருக்கும்.....


❤ சரண்ராஜ் ராஜேந்திரன்
சரண்யா பழனி ❤....

நன்றி 🙏.....

மேலும்

சுவாதிகுணசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2020 2:50 pm

கண பொழுதில் தான் உணரும்

கற்பனையில் தான் நகரும்

கவிதுவமும் கணக்கின்றி

காதலிலே நடைபயிலும்

நினைவதிலே அவள்(ன்) வண்ணம்

நிறைந்திருக்கும் அவன்(ள்) எண்ணம்
நித்திரையும் பாராமல்

நிதர்சனமாய் இவ்வெண்ணம்

நிழற்படத்தை நகர்த்தயிலே

நின்றுவிடும் அவள்(ன்) தனிலே...

நில்லாத காதல் மட்டும்

நிறைந்திருக்கும் மனதினிலே...

காலம் அது மாறுகையில்

காதல் மட்டும் விதிவிலக்கா?

சூழ்நிலையின் பெயரினிலே

சுற்றம் எனும் உறவினிலே

உள்ளக்காதல் அதும் கடந்திடுமே...

உற்ற காயமதும் மறந்திடுமே...

உண்மை காதல் அது இல்லையெனில்....

-காதலும் கடந்து போகும்

மேலும்

சுவாதிகுணசேகரன் - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2020 7:29 pm

விதைதனிலே விடியல் கொண்டு

விருட்சமாய் தான் விரிந்து நின்று

விருந்து முதல் மருந்து வரை

வித்தாகி நின்ற என்னை

வேரறுத்து விட்டாயே...

நிழல் தனிலே குளுமை கண்டாய்

நிலத்தடி நீர் வளமை கண்டாய்

பாட்டன் பூட்டன் போதாதென

பரம்பரைக்கும் படையல் கொண்டாய்

நன்மை யெல்லாம் நல்கி விட்டு

நன்றி கெட்டு எனை அறுத்தாய்

காடுகளை அழித்து நீயும்

கரியமில வாயுவிலோ

கார்பன் கலந்த காற்றினிலோ

காலம் கடத்த கணித்தாயோ?

மதியில் கொள் மனிதனே

உணர்வற்ற மரமென்று நினைத்தாயோ

உயிர் மூச்சின் உரமடா நாங்கள்

உரம் தனை சிதைத்து விட்டு

உயிர் வாழ சித்தம் கொண்ட

பித்து பிடித்த மனிதனே

மேலும்

சுவாதிகுணசேகரன் - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2020 4:38 pm

உடல்தனையே மறைப்பதற்கும்

உரிமையிழந்த பெண்ணியமோ

உதிரமதை உதிர்த்து அன்றோ

உரிமையினை பெண்களுக்காய்

உலகமதில் பெற்றனரே...

நாடதுவும் வளர்ந்து வர

நன்னறிவும் பெருகி வர

ஆடைதனை குறைத்து இன்றோ

நாகரிக வளர்ப்பு....

அறைகுறை உடுப்பினிலே

அகிலமெங்கும் நடப்பு....

உடையுரிமை கிடைத்தும் இங்கே

உளம் உவகை கொள்ளலையே

நாகரிகம் மட்டும் இங்கே

நல் வளர்ச்சி கொள்கையிலே

நம்உடை அதுதான் குறைவதேனோ???

மேலும்

சுவாதிகுணசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2020 4:38 pm

உடல்தனையே மறைப்பதற்கும்

உரிமையிழந்த பெண்ணியமோ

உதிரமதை உதிர்த்து அன்றோ

உரிமையினை பெண்களுக்காய்

உலகமதில் பெற்றனரே...

நாடதுவும் வளர்ந்து வர

நன்னறிவும் பெருகி வர

ஆடைதனை குறைத்து இன்றோ

நாகரிக வளர்ப்பு....

அறைகுறை உடுப்பினிலே

அகிலமெங்கும் நடப்பு....

உடையுரிமை கிடைத்தும் இங்கே

உளம் உவகை கொள்ளலையே

நாகரிகம் மட்டும் இங்கே

நல் வளர்ச்சி கொள்கையிலே

நம்உடை அதுதான் குறைவதேனோ???

மேலும்

சுவாதிகுணசேகரன் - கிறுக்கன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2020 4:28 am

இன்று ஒரு நாள் கழிந்தது
என் வாழ்வு தனில்
இறைவா உன் திருவடி சேர்ந்திட
இன்னும் எத்தனை நாட்கள் எடுக்குமோ?

ஏன் இங்கு வந்தேனோ
விடை தேடித்தேடி நொந்தேனோjQuery17109671068708414186_1640985438907

பாவம் செய்ய படைத்திட்டாயோjQuery171007071162634219275_1641036848452
புவி மேலே பாவியாக திரியவிட்டாயோ??

ஏன் இந்தக் கோலம்??
என்று தான் மாறும் என் காலம்??

இன்று ஒரு நாள் கழிந்தது
இறைவா உன் திருவடி சேர்ந்திட
இன்னும் எத்தனை நாட்கள் எடுக்குமோ?!

அல்லல் அறுக்கும் ஈசா
பாவி இவனை ஆட்கொள்வாயா?

செய்த பாவம் மலை போல் இருக்கு
பாவம் இவன் என கருணை பிறக்குமா உனக்கு??

ஆதியும் நீயே,
அந்தமும் நீயே,
முதலும் நீயே,
முடிவும் நீயே,

மேலும்

சுவாதிகுணசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2020 7:29 pm

விதைதனிலே விடியல் கொண்டு

விருட்சமாய் தான் விரிந்து நின்று

விருந்து முதல் மருந்து வரை

வித்தாகி நின்ற என்னை

வேரறுத்து விட்டாயே...

நிழல் தனிலே குளுமை கண்டாய்

நிலத்தடி நீர் வளமை கண்டாய்

பாட்டன் பூட்டன் போதாதென

பரம்பரைக்கும் படையல் கொண்டாய்

நன்மை யெல்லாம் நல்கி விட்டு

நன்றி கெட்டு எனை அறுத்தாய்

காடுகளை அழித்து நீயும்

கரியமில வாயுவிலோ

கார்பன் கலந்த காற்றினிலோ

காலம் கடத்த கணித்தாயோ?

மதியில் கொள் மனிதனே

உணர்வற்ற மரமென்று நினைத்தாயோ

உயிர் மூச்சின் உரமடா நாங்கள்

உரம் தனை சிதைத்து விட்டு

உயிர் வாழ சித்தம் கொண்ட

பித்து பிடித்த மனிதனே

மேலும்

சுவாதிகுணசேகரன் - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2020 9:47 am

வருடங்கள் நான்கிற்கும்

வண்ணங்கள் கொடுத்தவள்-என்

எண்ணங்கள் அனைத்தையும்-நான்

எண்ணும் முன்னே அறிபவள்👭

கண்ணோடு இமை போல்-என்றும்

என்னோடு இருப்பவள்👭...

எண்ணற்ற பொழுதுகள்- நம்

எண்ணிலடங்கா நினைவுகள்-அதை

சொல்லில் அடக்க முடியுமோ?-அதை

சொன்னால் தான் முடியுமோ?...

நாட்கள் அது நகரலாம்

நண்பர்கள் பலர் சேரலாம்

புகைப்படத்தில் முகம் அறிந்து

புன்னகைக்கும் காலத்திலும்

ஒருத்திஇவள் முகம் மட்டும்😊

தனித்திருக்கும் மனதினிலே😊😊-நாம்

இணைந்திருந்த காலமதும்

இனித்திருக்கும் நினைவினிலே❤....

மேலும்

நன்றி 17-Jun-2020 12:50 pm
சூப்பர் 01-Jun-2020 9:57 am
சுவாதிகுணசேகரன் - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2020 6:59 am

கண் இமைக்கும் கண பொழுதில்

கண் அயர்ந்தேன் கனவு தனில்

சிட்டாக சிறகிணைத்து

எட்டும் தூரம் பறந்து சென்றேன்

ஏற்ற தாழ்வு ஏதுமற்ற

ஏழ்மை என்ற வார்தை அற்ற

எண்ணம் தனில் கலங்க மற்ற

எல்லை இல்லா வானை கண்டேன்...

மண் ஆசை மதியில் கொண்ட

மனிதரோ அம் மண்ணில் இல்லை

பொன் ஆசை பொதிந்து போன

பொல்லாரும் தானோ இல்லை

பெண் ஆசை கொண்டார் உண்டு - அதுவும்

பேரன்பு கொண்ட பெண் ஒருத்தியின்பால்....

அடிமைதனம் செய்வதற்கும்

ஆளுமையில் ஆள்வதற்கும்

அன்பென்ற சொல் ஒன்றே

அடித்தளமாய் அமைந்ததங்கு ...

மெல்ல மெல்ல சிறகிழந்து

மென் உணர்வும் மேல் படர்ந்து

கனவினையே கலைத்து விட்டு

கண் விழித்து பார்கின்றேன்

வஞ்சகத்தை நெஞ

மேலும்

நன்றி 08-Jun-2020 8:35 am
அருமை 07-Jun-2020 11:31 pm
நன்றி சகோதரரே... 07-Jun-2020 10:48 pm
அருமையான பதிவு தோழி.... இவ்வுலகில் வஞ்சகம் கொண்ட மனித மிருகங்கள் உடன் வாழ்வதற்கு பதில்.... கனவு உலகில் நாம் உள்ளத்தை வென்ற சிலருடன் வாழ்ந்து விடலாம்.... 07-Jun-2020 11:08 am
சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-May-2020 8:36 pm

வண்ண கனவுமே

வர்ணமின்றி கலையுமோ?...

எண்ண குவியலுமே

ஏக்கமுற்று தேயுமோ?...

சிறகொன்று இருந்திருந்தால்

சிறையுற்றிருக்க மாட்டேன் நான்.....

இறகின்றி போனதாலோ

இத்தனிமையிலே தாகம் கொண்டேன்...

தனிமை இல்லா தானிருந்தால் - அதில்

இனிமை காண இயலா திருந்தால்...

வண்மை கொண்ட உள்ள மதும்

வறுமை கொண்டு வாடி ருக்கும்...

வண்ணம் கொண்ட கனவு களும்

வனப்பிழந்து ஓய்ந்திருக்கும்....

ஆகையால்......

திண்மை கொண்டு தனிமையிலும் திறமை படைப்போம்.....

மேலும்

நன்றி நண்பரே 19-May-2020 7:11 am
நன்றி 19-May-2020 7:10 am
அருமை தனிமையில் வரும் சிந்தனை அழகு. வாழ்த்துக்கள். 17-May-2020 3:40 am
அருமையான பதிவு தோழி ... சிந்தனை பிறப்பது தனிமையில் உண்மையை உணர்வது தனிமையில் மனம் சிராய் இருப்பது தனிமையில் மனம் மாற்றம் நடப்பது தனிமையில் தனிமை தவறு இல்லை, ஆனால் எப்போதும் தனிமையில் இருப்பது பயன் இல்லை.... 12-May-2020 8:23 am
சுவாதிகுணசேகரன் - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2020 10:31 pm

கடல் அலையாய் எனை அடிக்க

கரைந்து விடும் கரைமணலென

கணித்தாயோ எங்களையே....

காட்டாற்றில் கரை கடக்கும்

கட்டுமரம் நாங்களடா....

காற்றற்று ஆனாலும்

கட்டவிழ்த்து போனாலும்

உணர்விழந்து நின்றாலும் - எம்

உதிரமது உறைந்தாலும் - உம்

பண வர்க்க அலையினாலே - எம்

பசி வயிற்றில் அடித்தாலும் - உம்

தாளை வணங்கி நின்ற போதும் எமை

ஏழை என்று அறைந்தாலும் - எம்

கரமதனை துடுப்பாக்கி

உரமாய் எமை உரித்தாக்கி...

உதைத்தெழுவேன் உனையே - எம்

தோணியெனும் ஏணியிலே - நல்

தோன்றலாவேன் இப் பாணியிலே

பசி என்னும் பிணியதுவும்

திசையிழக்கும் அந்நாளினிலே

பண வர்க்க கொடுமையதும்

பறந்து போகும

மேலும்

நன்றி... 11-May-2020 7:43 am
அருமை... பணம் பொதுவாக இல்லாமல் பண்டம் மாற்றும் முறை இருந்தால் விதைப்பவன்(உற்பத்தியாளர்) தான் பணக்காரர். விதைப்பவன் விலை நிர்ணயித்தல் ஏழ்மை அகலும்... 10-May-2020 1:24 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

user photo

வீரா

சேலம்
இசைப்ரியன்

இசைப்ரியன்

விளந்தை (திருக்கோவிலூர்)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

மேலே