செந்தில் குமரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்தில் குமரன்
இடம்:  மதுரை - நெல்லை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Nov-2013
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  6

என் படைப்புகள்
செந்தில் குமரன் செய்திகள்
செந்தில் குமரன் - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2015 9:08 am

பணிதனில் நேர்மை
பதவியில் பணிவு
வாழ்வினில் எளிமை
வாக்கினில் சுத்தம்..
கனவினில் மகத்துவம்
நாவினில் நாணயம்..
செயலினில் சிறப்பு
உள்ளத்தில் உறுதி
தாய்மொழிமேல் காதல்
தாய் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
மனிதம் உயிர்மூச்சு
கறைபடா கரங்கள்..
எல்லாம்..இம்மியும்
குறைவின்றி இலங்குகின்ற
நல்லவர் எவருளும்..
உறைகின்றார்..உயிர்க்கின்றார்..
ஒவ்வொரு நொடியும் ..
இருக்கின்றார்..இருக்கின்றார்
இறக்காமல் ...பிறந்துகொண்டே
இருக்கின்றார்...
இறப்பில்லா இனிய தெய்வம்
நம் ......
அப்துல் கலாம்..!
அவரைப் போல் வாழ்வது கூட அல்ல
அவராகவே வாழ்வதே
அவருக்கு அஞ்சலி!

மேலும்

மிக்க நன்றி நண்பரே! 07-Aug-2015 9:02 am
நன்று. வாழ்த்துக்கள் அய்யா.... 07-Aug-2015 8:41 am
நன்றி சார் ! 04-Aug-2015 10:59 pm
இறப்பில்லா இனிய தெய்வம் அவரைப் போல் வாழ்வது கூட அல்ல அவராகவே வாழ்வதே அவருக்கு அஞ்சலி!----------------சிறப்பாக வாழ்ந்த தலைவருக்குச் சிறந்த அஞ்சலி! 04-Aug-2015 9:06 pm
செந்தில் குமரன் - நா கூர் கவி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-May-2015 9:27 pm

கலியுகக் கர்ணன் நவாப் சி அப்துல் ஹகீம்
By நாகூர் ரூமி


செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று சொல்லக்கேள்விபட்டிருக்கிறோம். அது எப்படி ஒருவர் செத்தபிறகும் கொடுப்பார்? கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதி இறந்த பிறகு ஒரு ஏழை தன் தேவைகளைச் சொல்லி அவர் மண்ணறைக்கு அருகில் நின்று புலம்பினாராம். உடனே மண்ணறைக்குள்ளிருந்து வெளியே வந்த கையில் தங்க மோதிரம்! அன்றிலிருந்து ’செத்தும் கொடுத்தார் சீதக்காதி’ என்று சொல்வது பிரபலமானதாம்!

ஒருவர் செத்தபிறகும் சொத்துக்காக உரிமை கொண்டாட வழக்குகள் நடத்துவதுதான (...)

மேலும்

நல்ல பதிவு. நன்றிகள் பல. ஆனால், படிக்க வேண்டியவர்கள், படிக்க மாட்டார்களே! படித்தாலும் உணர மாட்டார்களே! என்ன செய்ய??? வரலாற்றில் எல்லோருக்கும் இடம் உண்டு. ஆனால், எந்தப் பக்கத்தை எதனால் நிரப்புகிறோம் என்பதில்தான் உள்ளது நாம் வாழ்ந்ததும்! வீழ்ந்ததும்!! உணர வேண்டியவர்கள் உணரட்டும்.... நன்றி! நற்பதிவுக்கு மீண்டும்.. கட்டுரையாளருக்கு அன்பான பாராட்டுக்கள். வளரட்டும் அவர்தம் பணி. 03-Jun-2015 9:44 am
ரூமி சாரின் கட்டுரையின் சிறப்பம்சமே தெளிவான ஆதாரங்களுடன் எளிய நடையில் நகைச்சுவை கலந்து நறுக்கென்று சொல்வது , அபார திறைமைகள் பல கொண்ட அவரின் படைப்பு மிக அருமை கவியே அதை எங்களுக்கு பகிர்ந்தளித்த உங்களுக்கு நன்றி! 29-May-2015 10:30 am
அருமையாக சொன்னீர்கள் அகம் நிறைந்த அகனாரே...! நன்றி....! 28-May-2015 10:54 pm
நல்ல பதிவு தோழரே! 28-May-2015 6:41 pm
செந்தில் குமரன் - செந்தில் குமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2015 12:50 pm

வாடகை வீடு
ஆணி அடிக்கக் கூடாது
அங்கங்கே எதையும்
மாட்டி வைக்கக் கூடாது
படங்கள் தொங்கலாமா?
கூடவே கூடாது
வாடகைத் தேதி
மறக்கக் கூடாது
சின்னதாய்க் காய்கறித் தோட்டம்
கனவு காணக் கூடாது
பல ஆண்டு வர்ணம்
சிறிதும் சிதையக் கூடாது
அது கூடாது
இது கூடாது
மனது நினைத்தது?
நாம் இங்கே
வந்திருக்கக் கூடாது!!!

மேலும்

தங்கள் வாழ்த்துக்கு நன்றி சித்ரா அவர்களே! 15-May-2015 2:33 pm
உண்மை... கடைசிவரி முத்தாய்ப்பு 15-May-2015 12:54 pm
செந்தில் குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2015 12:50 pm

வாடகை வீடு
ஆணி அடிக்கக் கூடாது
அங்கங்கே எதையும்
மாட்டி வைக்கக் கூடாது
படங்கள் தொங்கலாமா?
கூடவே கூடாது
வாடகைத் தேதி
மறக்கக் கூடாது
சின்னதாய்க் காய்கறித் தோட்டம்
கனவு காணக் கூடாது
பல ஆண்டு வர்ணம்
சிறிதும் சிதையக் கூடாது
அது கூடாது
இது கூடாது
மனது நினைத்தது?
நாம் இங்கே
வந்திருக்கக் கூடாது!!!

மேலும்

தங்கள் வாழ்த்துக்கு நன்றி சித்ரா அவர்களே! 15-May-2015 2:33 pm
உண்மை... கடைசிவரி முத்தாய்ப்பு 15-May-2015 12:54 pm
செந்தில் குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2015 10:15 am

நண்பா!
நண்பா!
காலமல்லாக் காலத்தில்
காலன் வந்துனைக்
காவு கொண்டான்
எனை இரண்டாய்க்
கீறிச் சென்றான்...

சுமை ஊர்தியாய்
எமன் வந்து
உன் உயிரைச்
சுமந்து சென்றான்
என் நினைவைக்
கவர்ந்து கொண்டான்....

சாலையில் சடலமாய்க்
கிடந்தாய் நீ
எனும் செய்தி
காதுகளை எட்டும் முன்
உள்ளத்தைச் சுட்டது...

சிரிக்கும் உன் செழித்த முகம்
சிதைந்த நிலை கேட்டு
உடைந்த என் உள்ளத்தை
உரைக்க ஓர் வார்த்தை இல்லை...

இத்தனை விரைவாய்
எமை விட்டு நீ விரைவாய்
என
ஏன் நீ உரையாய்?
உயிர் இனிக்கும் நட்பு
உயிர் துடிக்கும் நட்பாய்
உன் பிரிவால் ஆனதையா!

எனக்கு நீ சோறிட்டதும்
உனக்கு நான

மேலும்

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் பார்வைகளுக்கும் இனிய நன்றிகள் 08-Jan-2015 10:45 am
வலி மிகு வரிகள் .. வாழ்த்துக்கள் ... 06-Jan-2015 1:40 pm
செந்தில் குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2015 9:22 am

காதலுக்குக் கண் இல்லை!
வசைமொழி உண்மையே?
ஆம்!
அகவிழிகள் ஆற்றலுடன்
பேசும்போது
புறவிழிகள் பொறுமை காப்பது
பொருத்தமே!!!

மேலும்

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் பார்வைகளுக்கும் அன்பு நன்றிகள் 08-Jan-2015 10:44 am
நன்று! 06-Jan-2015 11:29 pm
எண்ணம் எழில் !!! 06-Jan-2015 10:12 am
அனுபவம் தோழா....! 06-Jan-2015 10:07 am
செந்தில் குமரன் - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2014 2:30 pm

மாண்டுபோகும் மனிதம்---ப்ரியா

அளவில்லாமல் குடித்து
போதை தலைக்கேறி
மகளென்று அறிந்தும்
கண்ணில் காமத்தீ பற்றியெரிய
பெற்ற மகளையே சீரழிக்கும்
தந்தை என்ற மிருகம்
ஒருபுறம்......!!!

அளவுக்கதிகமான அலுவலகப்பணி
பெண்ணாக இருந்தும்
தைரியமாய் அமர்ந்து
பணிமுடித்து காலதாமதமாய்
செல்பவளின்
கற்பை சூறையாடும்
உயரதிகாரி என்ற கயவன்
மறுபுறம்.....!!!

கையில் பாடப்புத்தகத்துடன்
கல்வி கற்க செல்லும் பெண்
மாலைவேளையில்
சிறப்பு வகுப்பு என்ற
பெயரில் பாடம் நடத்திவிட்டு
பூ போன்ற மென்மையான
பெண்ணை வன்மையான
முறையில் வேட்டையாடும்
ஓநாய்க்கூட்டம்
ஒரு பக்கம்.....!!!

கள்ளகபடமில்லா

மேலும்

ம்ம்.....தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே.....!! 18-Feb-2016 10:09 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே........ 18-Feb-2016 10:08 am
நாட்டுக்கு தேவையான பாடல் ... அருமையான தொகுப்பு .. நாச கொடூரர்கள் அழியட்டும் 17-Feb-2016 11:32 pm
மனதை உருக்கி எடுக்கும் கவிதை. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதும் கவிதாயினிகளைப் பார்த்து சந்தோசமாக இருக்கிறது. இத்தனை தடைகளைக் கடந்து வந்து சாதித்துக்கொண்டிருக்கும் உங்களைப் போன்ற பெண் இனச் சகோதரிகளுக்கும், இந்த கவிதைக்கும் வாழ்த்துகள் . 29-Nov-2015 8:58 am
செந்தில் குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2014 3:09 pm

நமக்கான நகர்த்தலில்
நகர்ந்தவை
நாட்கள் மட்டுமே...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

மேலே