சிபி.வித்யாகரண் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிபி.வித்யாகரண்
இடம்:  பெருங்களத்தூர் - சென்னை
பிறந்த தேதி :  07-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Sep-2014
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  2

என்னைப் பற்றி...

என்னைப் பற்றி பெருமையாக சொல்ல ஒன்றும் இல்லை...!

என் படைப்புகள்
சிபி.வித்யாகரண் செய்திகள்
சிபி.வித்யாகரண் - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2014 1:57 am

உன் மௌனம்
களைந்த பேச்சு...
நீ கொட்டித் தீர்த்த
அடைமழை...

பாவை நீ
பூட்டி வைத்த
பார்வைகள் அனைத்தும்...

என் தாய் மண்ணின்
இருளைப் போக்கும்
மின்சாரமடி...

சுண்டு விரலால்
ஈர்க்கும் காந்தமடி...
சுருண்டு விழுவேன்
உனை பார்த்த நொடி...

என் கவிதைகளுக்கு
நீ சந்தமடி...
என் கற்பனைக்கு
மட்டும் சொந்தமடி....!

மேலும்

ஹா ஹா ஹா மிக்க மகிழ்ச்சி நண்பரே..... வருகை தந்து ரசித்தமைக்கும் ஊக்கமான கருத்துப்பதிவிற்கும் நன்றிகள் பல....! 31-Oct-2014 7:52 am
சுண்டு விரலால் ஈர்க்கும் காந்தமடி... சுருண்டு விழுவேன் உனை பார்த்த நொடி -------------------------------------- அருமை அருமை!! கற்பனை அழகு ... காதலில் கலக்குறீங்க தோழா! 31-Oct-2014 12:45 am
வருகை தந்து காதலை ரசித்தமைக்கு நன்றி நட்பே....! 19-Oct-2014 8:28 pm
அருமையான காதல் படைப்பு.... அருமை........ 19-Oct-2014 7:30 pm
சிபி.வித்யாகரண் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2014 7:28 pm

நீங்கள் இங்கே எழுதுவது....

1. பொழுது போக்கிற்கா ?

2. ஓர் இலக்கிய மரியாதை கௌரவம்
கிடைக்கும் என்பதற்காகவா ?

3. இலக்கியத்தில் பெரும் பெயர் புகழ்
பெற வேண்டும் என்ற பேரவாவினாலா ? (AMBITION )

4. நட்பு தோழமை கிடைக்கும் என்பதாலா ?

5. தனிமையை விரட்டி மன மகிழ்ச்சி தருகிறது
என்பதாலா ?
------கவின் சாரலன்

மேலும்

நல்ல தகவலுக்கு நன்றிகள் உடன்பிறப்பே. அறிவுரை ஏற்று நடப்பேன். நன்றி ---- யாழ்மொழி 06-Oct-2014 10:08 am
3. இலக்கியத்தில் பெரும் பெயர் புகழ் பெற வேண்டும் என்ற பேரவா -----நிச்சயம் பெறுவீர்கள் இங்கே நன் நட்பு கிடைக்கும் . தனிமை விலகி ஓடிவிடும் இது ஒரு மானசீக மலர்த் தோட்டம் . கவிதை பதியும்போதும் கருத்தினில் கலந்துரையாடும் போதும் யாரும் தனிமையை உணர மாட்டார்கள். . நன்றி. வாழ்த்துக்கள் சகோதரி. யாழ்மொழி. பி.கு.அரட்டை தனிவிடுகையில் நம்பகமானவ்ர்களோடு மட்டும் உரையாடுங்கள் அதுவும் அவசியமானால் .மின்னஞ்சல், முகவரி ,செல் நம்பர் எவருக்கும் கொடுக்காதீர்கள். இது எனது தனிப் பட்ட அறிவுரை. -----அன்புடன், கவின் சாரலன் 04-Oct-2014 3:21 pm
உண்மை . கவிதை மனதைத் தொடவேண்டும். அதுதான் உண்மையான கவிதை. நன்றி வாழ்த்துக்கள். சகோதரி ப்ரியா ராம். -----அன்புடன் , கவின் சாரலன் 04-Oct-2014 2:53 pm
நமது பக்கம் ஜன்னல். மனத் தென்றல் அங்கே வீசட்டும். மன மலரை சிலர் ஜன்னலோரத்தில் வைத்துச் செல்லட்டும். நன்றி வாழ்த்துக்கள் சகோ. முரளி. -----அன்புடன், கவின் சாரலன் 04-Oct-2014 2:50 pm
சிபி.வித்யாகரண் - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2014 9:31 pm

உன்னிடமே பிறந்து
உன்னாலே வளர்ந்து
உனக்காக தலைவணங்கி
நிழல் தந்து சுகம் தந்து
உன் மக்கள் உண்டு மகிழ
சுவைமிக்க கனி தந்து
காற்றாட இலை அசைத்து
குளிர் வாடை உனக்களித்து
குகை போல நான் இருந்து
குழந்தைகளைக் காக்கின்றேன்
நீ பெற்ற பிள்ளையம்மா
மாமரம் என்று பெயர்
என் கனிகள் கொடுப்பதற்கு
கல்லெறியும் தாங்கிடுவேன்
கண்ணீரும் வடித்திடுவேன்
இருந்தும் உன் பொறுமை
எனக்கு உண்டு உணர்ந்திடுவேன்
நிலமென்றும் பூமிஎன்றும்
பொறுமைக்கு உதாரணமாய்
நீ இருப்பாய் என் தாயே

மேலும்

நன்றி வித்தியாகரன் 22-Sep-2014 1:39 pm
மண்ணுக்கும் மரத்துக்குமான அன்பை, பாசத்தை, காதலை கவி வரிகளாக வடித்த உம்மை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை தாயே...! 22-Sep-2014 12:34 am
சிபி.வித்யாகரண் - முஹம்மது சகூருதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2014 12:06 am

..."" குறையுள்ள மனிதர்கள் ""...

பொன்னோடு பொருளும்
கொடுத்து உன்னோடு
அழைப்பதை விடுத்து
பெண்ணோடு எல்லாமும்
கேட்பதேன்.... உன்னோடிருந்த
மனிதம் மண்ணோடா,
அல்லது அதையும்
கடந்து வான் விண்ணோடா ...?
நீயே கேட்டுப்பார் உனை
மனிதன் தானா .... விலைபேசிடும்
அடிமை சந்தையில் உனையே
நீ விற்பதுமேனோ, மாடாய் நீ
பிறந்திருந்தாலும் மரியாதை ...
மனிதனாய் பிறந்தே பாவியானாய் ..
அன்னை சொல் கேட்டிரா நீ
சீரழிக்கும் சீரோடு பேர்போக்கும்
ஆடம்பர சுகங்கள் கிடைத்திட
அனுசரிக்கும் பிள்ளையானாய்
அவமானம் கொல்லவில்லையா,?
தன் உடல் விற்கும் தாசியும்
சிறந்தவளே.. உயிர்ப்பிணம்
உந்தன் முன்னால்.. பூமியிலே

மேலும்

உண்மை படைப்பு மிகவும் அருமை....... இளைய சமுதாயம் மனது வைத்தால் நிச்சயம் மாற்றம் உண்டாகும் அருமை நட்பே! 22-Sep-2014 11:22 am
மிகவும் அருமை...! 22-Sep-2014 11:13 am
அருமை தோழரே... 22-Sep-2014 11:07 am
ஆம் பிறவாமலே இருந்திருக்கலாம்........... உண்மை வரிகள்.......... 22-Sep-2014 10:49 am
சிபி.வித்யாகரண் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2014 10:53 pm

தான் அவ்வளவு அழகாக இருக்கிறோம்-என்பது
மயிலுக்கு தெரியாது....

தான் எவ்வளவு கருப்பாக இருக்கிறோம்-என்பது
காக்கைக்கு தெரியாது...

மேலும்

அட அழகு அழகு 17-Sep-2014 12:26 pm
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 17-Sep-2014 2:11 am
அழகு என்பது பார்வையில் அல்ல, நம் உணர்வில் தான்... 16-Sep-2014 11:10 pm
மேலும்...
கருத்துகள்

மேலே