ACM Badurdeen - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ACM Badurdeen
இடம்:  Sri Lanka
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Feb-2013
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  4

என்னைப் பற்றி...

பள்ளிப் பருவத்துக் கவிஜன்
பாதியில் நிறுத்தியிருந்தேன் -இன்று
புதியதாய்த் தொடர்கிறேன் இப்
புவியின் விடியலுக்காய் !

என் படைப்புகள்
ACM Badurdeen செய்திகள்
ACM Badurdeen - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2022 1:14 am

ஏனோ பல வருடங்கள்
எளுதாமல் விட்டேனே
எங்கு சென்றாய் என் பேனாவே..

தூங்கிச் சென்ற எண்ணக்
குமுறல்களை மீ்ண்டும்
எளுப்பச் சென்றாயோ.. இல்லை
மனசுக்குள் என்றோ
மளுங்கிப் போய் விட்ட
எண்ணக் கதவுகளை.. மீண்டும்
திறக்கச் சென்றாயோ..

காலச் சக்கரத்தின்
கனமான வேலைகளால்
களையுற்றுப் போனாயோ... உன்

கவிதைகளால் உலகிற்கு
மிளிர்ச்சியும் உண்டென்று
மகிழ்ச்சியாய் நவின்ற நீ..
என் இதயத்தைப் பராக்காக்கி
உறங்கத்தான் சென்றாயோ..

ஓ.. என் இதயப் பேனாவே
எழும்பிவிடு அவசரமாய்..
எளுச்சிக்காய் எழுதவென்று
எழுந்து நில்.. இப்போதே..!!

மேலும்

நானும் எழுதி வெகுநாளாச்சி; என் எண்ணங்களை எனக்கு மாறாக தாங்கள் சொன்னதாக நினைக்கிறேன்; நல்லாருக்கு, உங்கள் படைப்பிற்கு என் வாழ்த்துகள் 13-Aug-2022 12:51 pm
ACM Badurdeen - ACM Badurdeen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2013 12:32 pm

விண்ணில் தெரிய வேண்டும் -எம்
வீட்டின் வெளிச்சங்கள்
மண்ணில் மறையவேண்டும் -இம்
மாந்தரின் மடமைகள்.

வார்த்தையில் மிளிர வேண்டும் -நல்
வாய்மையும் நேர்மையும்
நடத்தையில் காணவேண்டும் -எம்
நம்பிக்கையும் உயர் குணமும்.

என்றும் எப்போதும் - வாழ்வில்
எளிமையைப் பேணவேண்டும்
ஏழையின் நெஞ்சில் - காணும்
ஏக்கத்தை மறைக்க வேண்டும்.

சொல்லும் செயலும் - ஒன்றாய்
சுடரொளி வீச வேண்டும்
பூமியின் மைந்தரெல்லாம் -எம்மைப்
போற்றியே தொடர வேண்டும்.

விண்ணில் தெரிய வேண்டும் -எம்
வீட்டின் வெளிச்சங்கள் ..
வானவர் அறிந்து கொண்டு -எம்
வாசலுக்குள் வரவேண்டும் !

மேலும்

ஏனோ பல வருடங்கள் எளுதாமல் விட்டேனே எங்கு சென்றாய் என் பேனாவே.. தூங்கிச் சென்ற எண்ணக் குமுறல்களை மீ்ண்டும் எளுப்பச் சென்றாயோ.. இல்லை மனசுக்குள் என்றோ மளுங்கிப் போய் விட்ட எண்ணக் கதவுகளை.. மீண்டும் திறக்கச் சென்றாயோ.. காலச் சக்கரத்தின் கனமான வேலைகளால் களையுற்றுப் போனாயோ... உன் கவிதைகளால் உலகிற்கு மிளிர்ச்சியும் உண்டென்று மகிழ்ச்சியாய் நவின்ற நீ.. என் இதயத்தைப் பராக்காக்கி உறங்கத்தான் சென்றாயோ.. ஓ.. என் இதயப் பேனாவே எழும்பிவிடு அவசரமாய்.. எளுச்சிக்காய் எழுதவென்று எழுந்து நில்.. இப்போதே..!! 13-Aug-2022 1:03 am
வானவர்கள் வாசலுக்கு வரட்டும் வாழ்த்துக்கள்! 07-Sep-2013 3:18 pm
ACM Badurdeen - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2014 8:01 pm

வட்ட நிலாவொன்று
வடிவான 'ஷோள்' போட்டு
வானத்தில் வந்ததோ என
மெய் மறந்து நின்றேன்

ஆஹா...!
நீலப் பட்டுடுத்தி
நீதான் வந்தாயோ..
நெடிய முக்காடிட்டு என்
நெஞ்சினை மலரவைக்க..

புன் முறுவல் பூக்கையிலே
பரு ரெண்டு சிவத்து நின்று
பாவையுன் முகத்தினிலே
பசுமை தருகிறதே.. உன்
பாசத்தின் விண் விளக்கோ !
இல்லை...

என் இதயத் துடிப்பில்
எழுந்திட்ட
மின் பொறித் தாக்கமோ !!

மேலும்

நல்ல கவி தோழமையே 01-Jun-2014 1:16 pm
மிகவும் அருமை நண்ப, மீண்டும் எழுதுங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! 22-May-2014 3:29 am
அருமை தோழரே தொடர்ந்து கலக்குங்கள் வாழ்த்துக்கள்............! 21-May-2014 10:37 pm
ACM Badurdeen - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2014 7:24 pm

விட்டுச் சென்ற
பாதையினை மீண்டும்
தொட்டுச்செல்ல
விளைகிறேன்...

பட்டுப்போன கொடி
பசுந்தளிர் விடுவதில்லை,
எனினும்
சுட்டுத் தீய்ந்த உள்ளம் என்றோ
சுடரொளி வீசுந்தானே;

கட்டுக் கோப்பில்லாக்
காதல் வாழ்வதனால்
தட்டுத் தடுமாறித்
தகிக்கின்ற உயிருக்கு -உன்
சொட்டுக் கண்ணீரால்
சோபனம் சொல்லாயோ !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

கிறுக்கன்

கிறுக்கன்

குடந்தை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

sarabass

sarabass

trichy
springsiva

springsiva

DELHI
தாரகை

தாரகை

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

springsiva

springsiva

DELHI
sarabass

sarabass

trichy
தாரகை

தாரகை

தமிழ் நாடு
மேலே