Arunkumar Krishnasamy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arunkumar Krishnasamy
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  22-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Feb-2014
பார்த்தவர்கள்:  223
புள்ளி:  8

என்னைப் பற்றி...

தமிழ் ஈன்ற பிள்ளை நான்

என் படைப்புகள்
Arunkumar Krishnasamy செய்திகள்
Arunkumar Krishnasamy - எண்ணம் (public)
04-Sep-2014 10:11 pm

எண்ணங்களோடு ஓர் உரையாடல்


மொட்டை மாடி
முழு பௌர்ணமி இரவு
ஆடி காற்றில் அலை மோதும் மனது
சிந்தனையில் ஆயிரம் விஷயங்கள்

சிரிக்கும் உதடுகள்
சிறுதுளி நீரில் கண்கள்

கடந்து போன காதலா?
நடந்து முடிந்த இன்னலா?
விடை தெரியாத விடியலா?
விளங்காமல் விரிந்தன சிந்தனைகள்


நடப்பவைகள் தெரியாதவன்
நடந்தவைகளுக்கு விளக்கம் தேடினேன்
இயன்றதை செய்யாமல்
இழந்ததை நினைத்தேன்

மெத்த படித்த அறிவு
மெதுவாய் சொன்னது
முட்டாள் அல்ல நீ-எல்லாம்
முடிந்தது என்று நினைக்க
கடந்த காலம் மறந்து
நடந்து போ முன்னே
எதி (...)

மேலும்

Arunkumar Krishnasamy - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2014 12:25 am

பள்ளி படிப்பு முடித்து
பட்ட படிப்பு சேர்ந்து
பட்டங்களும் பதக்கங்களும் வென்று
பட்ட படிப்பு முடித்தேன்
பன்னாட்டு நிறுவனத்தில் பணிசேர்ந்தேன்
என்நாடு விட்டு
எவன் நாட்டுக்கோ போய்
ஏராளமாய் சேர்த்து
தாராளமாய் காசிறைத்து
அன்மையில் வாங்கிய அடுக்கு மாடி ஒன்றில்
தனிமையில் கண்மூடிய போது
சேர்த்த பணமோ பார்த்த இடமோ
தராத இன்பத்தை தந்த ஞாபங்களை கேளும்!!!

அழகிய திங்கள் ஒன்றில்
அப்பா அம்மா
அருகில் உள்ள பள்ளி சேர்த்து விட
தாய் மடி அமர்ந்து பழகிய நான்
பள்ளி மர பெஞ்சில் அமர்ந்தேன்
அது கலைத்தாய் மடி என்றறியாத மடையன் நான் அப்பொழுது

அருகிலே அழுகையோடு சிலர்
முன்னால் அதிரிச்சியில் சிலர்
பின்

மேலும்

அருமை 03-Jun-2014 6:05 pm
Arunkumar Krishnasamy - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2014 4:18 pm

பிள்ளையரின் விளையாட்டு திடலான
பிள்ளையார் கோவில் வாசலிலே
ஓங்கி வளர்ந்த
ஒத்தை ஆல மரம் - அதை
சுத்தி கட்டிய கல் சுவற்றில்
தாயக் கரம் போட்டு
வெற்றிலை போட்ட
பொக்கைவாய் கிழவர் எல்லாம்
பொழுது போக்கி கொண்டிருந்தனர்
வழி சென்ற நானும்
விழி கொடுத்தேன்
விடலைகளின் விளையாட்டுக்கு
செவி கொடுத்தேன்
கிழடுகளின் உரையாடலுக்கு- கிழவரெல்லாம்
ஒபாமாவை பற்றியும் பேசவில்லை
உள்ளூர் அரசியலும் பேசவில்லை
பேச்செல்லாம்
வற்றி போன ஊர் ஓடையையும்
வறண்டு போன கோயில் கிணற்றையும்
வாடிப் போன வயலையும்
வாசம் மாறி போன மண்ணையும்
நேசம் மாறாத உறவுகளையும்
நேர்மை தவறாத நெஞ்சங்களையும் பற்றியே

பெருசென்று

மேலும்

Arunkumar Krishnasamy - Arunkumar Krishnasamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2014 11:47 am

பச்சை மரத்தடி அமர்ந்து
இச்சை தீர
இலக்கியம் படைக்க ஆசை

நீல வானம் துரத்தி
உலகமெங்கும் உலா போகும் ஆசை

அலையோடு ஆடும்
கலை மீனாகி
கடலின் கலை காண ஆசை

கருமேகத்தை கைப்பற்றி பாலைவனத்
தெருவெங்கும் மழைநீர்
தெரிக்க ஆசை

மலைக்காடும் மயிலாகி
மலைக்கும் நடனமாட ஆசை

கூவும் குயிலாகி
கூச்சலிட ஆசை

அற்ப வாழ்வில்
இத்தனை ஆசை

கற்பனைக்கு போடும் கடிவாளம்
விற்பனியில் இல்லை பின்
கற்பனையால் வரும் ஆசைக்கேது கடிவாளம்

மேலும்

எனக்கு கூவும் குயிலாய் குயில் பாட்டு பாட ஆசை ! ஆசைக்கு ஏது கட்டுப்பாடு நண்பா நல்ல கற்பனை 22-Mar-2014 3:40 pm
கற்பனை ஆசைகள் கண்டிப்பா கற்பனை கனவில் நிறைவேறும்...! கற்பனை அழகு தோழரே! 22-Mar-2014 1:43 pm
நல்ல நல்ல ஆசை.. நண்பா உனக்கு நிறைவேற வேண்டும். இது என் ஆசை 22-Mar-2014 1:36 pm
Arunkumar Krishnasamy - Arunkumar Krishnasamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2014 3:55 pm

பனி விழும் காலை பொழுதில்
பாவாடை தாவணி அணிந்து
பாதை கோலம் இடும்
கோதைகளை காண முடியவில்லை

அயல் கொண்டிருக்கும் கண்ணனை எழுப்ப
அபிராமி அந்தாதி பாடும் அந்தணர்களை காண முடியவில்லை

பாதையோர பச்சை புல் மீது
பனி துளி ஒன்றை
இச்சை தீர பார்த்த காலம் காணவில்லை

காரணங்கள் என்னவோ ???
கண்டதெல்லாம் கனவோ ???

காலங்கள் தான் கடந்தது
கோலங்கள் ஏன் மறைந்தது ??

சந்ததிகள் தான் மாறியது
அந்தாதி ஏன் மறைந்து போனது ???

இயந்தரங்கள் வந்தது
இயற்கை என்ன ஆனது ???

விடை தெரியா கேள்விகள்
படை எடுத்து வருகின்றது
விளக்குங்கள் யாரும் இதன் விளக்கங்களை

மேலும்

அருமை!தொலைந்துபோன ஆனால் தொலைந்து போககூடாத சந்தோஷ தருணங்கள் இவை. வாழ்த்துக்கள் அருண் 28-Mar-2014 11:42 am
அருமையான சிந்திக்க வைக்கும் கேள்விகள் நண்பரே. இயற்கையின் பகைவரே நாம் தானே. முழுதும் அழிக்காமல் திருந்துவரோ மனிதர். 22-Mar-2014 10:17 pm
Arunkumar Krishnasamy - Arunkumar Krishnasamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2014 10:42 am

என்
உதட்டோர புன்னகையில்
உன்னதத்தை கண்டதொரு மனம்
பொங்கி வரும் ஆசையை
தாங்கி பூர்த்தி செய்ய பாடுபட்ட மனம்
நான்
தேங்கி நிற்கும் போதெல்லாம்
தாங்கி நின்ற மனம்
தான் பட்ட துன்பம் எதுவும்
நான் பெற கூடாதென ஏங்கும் மனம்
என் தந்தை மனம்
அது
எனக்காக என்றும் துடிக்கும் மனம்
------------அருண்குமார்---------

மேலும்

Arunkumar Krishnasamy - Arunkumar Krishnasamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2014 10:43 am

அடி வானம் எங்கும்
இடி முழக்கம் செய்ய
இரை தேடச் சென்ற குருவி எல்லாம் மர
இலை மறைத்திருக்கும் கூடு தேடி வர
சாலை ஓரம் ஓடி ஆடி வாடி விட்ட
சிறுமியர் எல்லாம் வீடு தேடி ஓடி வர
வாசல் நின்று வாயாடி வாயாடி வயதான
சாயல் மறைக்க சாயம் போட்ட பெருசெல்லாம் இடிச்
சத்தம் கேட்டு களை(ல)ந்து செல்ல
இரவு அரக்கன் சூரியனை முழுங்கி
நிலவு மகளையும் நட்சத்திர குழந்தைகளையும்
கட்டவிழ்த்து விட்ட வேளையில்
மெத்தை மாடி வெட்ட வெளியில்
சுகமான காற்றில் தன்
சோகத்தை கலந்து
சுகமான கீதம் பாடி கொண்டிருந்தான் அவன்

பாட்டின் பொருள் வேறு என்றாலும்
பாடு பொருள் அவள் தான்
--------அருண் குமார்

மேலும்

கீதம் நன்று தோழரே! 28-Mar-2014 11:05 am
Arunkumar Krishnasamy - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2014 10:43 am

அடி வானம் எங்கும்
இடி முழக்கம் செய்ய
இரை தேடச் சென்ற குருவி எல்லாம் மர
இலை மறைத்திருக்கும் கூடு தேடி வர
சாலை ஓரம் ஓடி ஆடி வாடி விட்ட
சிறுமியர் எல்லாம் வீடு தேடி ஓடி வர
வாசல் நின்று வாயாடி வாயாடி வயதான
சாயல் மறைக்க சாயம் போட்ட பெருசெல்லாம் இடிச்
சத்தம் கேட்டு களை(ல)ந்து செல்ல
இரவு அரக்கன் சூரியனை முழுங்கி
நிலவு மகளையும் நட்சத்திர குழந்தைகளையும்
கட்டவிழ்த்து விட்ட வேளையில்
மெத்தை மாடி வெட்ட வெளியில்
சுகமான காற்றில் தன்
சோகத்தை கலந்து
சுகமான கீதம் பாடி கொண்டிருந்தான் அவன்

பாட்டின் பொருள் வேறு என்றாலும்
பாடு பொருள் அவள் தான்
--------அருண் குமார்

மேலும்

கீதம் நன்று தோழரே! 28-Mar-2014 11:05 am
Arunkumar Krishnasamy - Arunkumar Krishnasamy அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2014 3:28 pm

கற்பனைக்கும் உண்டோ கடிவாளம்

பச்சை மரத்தடி அமர்ந்து
இச்சை தீர
இலக்கியம் படைக்க ஆசை

நீல வானம் துரத்தி
உலகமெங்கும் உலா போகும் ஆசை

அலையோடு ஆடும்
கலை மீனாகி
கடலின் கலை காண ஆசை

கருமேகத்தை கைப்பற்றி பாலைவனத்
தெருவெங்கும் மழைநீர்
தெரிக்க ஆசை

மலைக்காடும் மயிலாகி
மலைக்கும் நடனமாட ஆசை

கூவும் குயிலாகி
கூச்சலிட ஆசை

அற்ப வாழ்வில்
இத்தனை ஆசை

கற்பனைக்கு போடும் கடிவாளம்
விற்பனியில் இல்லை பின்
கற்பனையால் வரும் ஆசைக்கேது கடிவாளம்

மேலும்

நன்றி ஐயா 22-Mar-2014 11:41 am
எண்ணமும் கவிதையாகி ஏற்றம் பெற்றுள்ளது 20-Mar-2014 4:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

தீப்சந்தினி

தீப்சந்தினி

மலேசியா
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
user photo

ABINAYA RAJENDRAN

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
தீப்சந்தினி

தீப்சந்தினி

மலேசியா

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே