Gowtham prabhu - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/wftlm_39042.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Gowtham prabhu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 214 |
புள்ளி | : 1 |
மதமும் இனமும்
மனதினே ஆளாமல்
மனிதமும் புனிதமும்
மலையாய் உயரட்டும்..!
பயமும் கோபமும்
பழக்கத்தில் இல்லாமல்
பணிவும் துணிவும்
பன்மடங்கு பெருகட்டும்..!
அன்னை தந்தையின்
அன்பினை மறக்காமல்
அவர்களே தெய்வமென்று
அகிலமும் வணங்கட்டும்..!
நட்பும் உறவும்
நன்மதிப்பு இழக்காமல்
நகமும் சதையுமாய்
நம்மோடு இருக்கட்டும்..!
தொடரும் தொல்லைகள்
தொடர்கதை ஆகாமல்
படரும் கொடியாய்
பரவட்டும் சந்தோசம்..!
இடரும் இன்னலும்
இனிமேலும் துளிராமல்
வளரும் வெண்ணிலவாய்
வருங்காலம் பிறக்கட்டும்..!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..!!!
உதயம் தரும் சூரியனாய்
உலகே ஆண்டது தமிழ்மொழி..!
உன்மை வரலாறு தெரியாமல்
உறவும் இதனை மறுக்கலாமா..!
இமயம் முதல் குமரி வரை
இனிதே வாழ்ந்த தமிழர் நாம்
இதயமற்ற இரும்பு மனதால்
இதனை இன்று மறக்கலாமா..!
ஆண்ட தமிழில் ஆரியம் கலந்து
தீன்டதகாத சாதியே விதைத்து
வேண்டிய வளங்களே பெற்றுக்கொண்டு
வேதனை நமக்கு தந்து மகிழ்ந்தான்..!
பெய்யும் மழையே முன்பே கனித்து
பெருமை பெற்றது தமிழன் ஜோதிடம்..!
பரிகாரம் என்ற பொய்யே வைத்து
பணத்தை பெற்றான் ஆரியன் நம்மிடம்..!
உழைப்பு இல்லாமல் ஊதியம் பெற்றான்
உழைப்பவன் ஏமாற உண்டியல் வைத்தான்
பிழைக்க ஆயிரம் வழி இருந்தும்
பிரார்த்தனை பெயரில் பிச்சை கேட்டான்..!
அ
கருத்தமேகம் மழை தருமா
கவலையோடு காத்திருக்கிறேன்..!
கழனியெல்லாம் விளைந்திடுமா
கண்ணில் நீரை பூத்திருக்கிறேன்..!
வருத்தமில்லா வாழ்க்கை வாழ
வருணபகவானே வேண்டிருக்கிறேன்..!
வருமையெல்லாம் ஒழிந்துபோக
வயலை மட்டும் நம்பிருக்கிறேன்..!
பட்ட கடன் ரொம்ப இருக்கு
பட்டினி வயிராய் நாட்கள் கடக்கு
நட்டம் எதுவும் வந்துபிட்டா
நாரி போகும் என் பிழைப்பு..!
விளைஞ்சதுக்கு விலையே சொல்ல
விவசாயிக்கு உரிமை இல்ல
அலைஞ்சு அலைஞ்சு உழைச்சாலும்
அசலே கட்ட முடியவில்லை..!
காட்டிலுள்ள மரத்தை அழிச்சு
கட்டிடமா உயர்த்திபிட்டு
வீட்டுமாடியில் விவசாயம் பன்னும்
வித்தியாசமான உலகமிது..!
பாட்டில் தண்ணியே குடிச்சுப
அன்னையே
அன்பின் உண்மையே
என் ஆதி அந்தம் நீயே..!
உன்னையே
உள்ளத்தில் நம்பியே
உயிர் வாழுரேன் உலகத்திலே..!
காடுமேடு தினம் நடந்து
கால்கடுக்க நீ உழைத்தாலும்
கஷ்டம் எனக்கு தெரியாமலே
கண்ணும் கருத்தாய் வளர்தாயம்மா..!
உருப்படாதவன் என சொல்லி
உறவுகள் பலர் இகழ்ந்தாலும்
என்மகன் தங்கம் என்று
எப்போதும் என்னை புகழ்வாயம்மா..!
உணவு உண்ணாமல் நானிருந்தால்
உறக்கம் தொலைத்து காத்திருப்பாய்..!
உன் பசியே மறந்துவிட்டு
உதிரம் கண்ணில் பூத்திருப்பாய்..!
எத்தனை பொய் நான் சொன்னாலும்
எல்லாவற்றையும் நம்பிடுவாய்..!
என் வயிறு நிறைந்தது என்றால்
எப்பொழுதும் நம்பமாட்டாய்..!
நீ சொல்லும் சொல்லை கேட்டத
அருவா தமிழ்பேசும் ஆப்பனூரில்
அழகா தமிழ்பேசும் ஆனழகா..!
பொதுவா பெண்களே கவர்ந்திழுக்கும்
பொழிவு வளம்பெற்ற பேரழகா..!
நண்பா என்னும் இன்சொல்லால்
நம்பிக்கை ஊட்டும் என்தோழா..!
அன்பா என்றும் அறம்சொல்லி
அறிவு புகட்டும் நல்தோழா..!
உயிர் எழுத்து அறியும் முன்னே
உணர்வால் நட்பை அறிய வைத்தாய்..!
உலகம் இயக்கும் அன்னை அன்பை
உண்மை நட்பால் தெரிய வைத்தாய்..!
குழம்பி போன என் மனக்குளத்தை
குடிக்கும் நீராய் தெளிய வைத்தாய்..!
குசேலன் பெற்ற கண்ணன் போல
குலம் சிறக்க வழியும் வகுத்தாய்..!
எல்லை மீறிய என் கவலைகளுக்கு
எமனாய் நின்று கல்லறை செய்தாய்..!
தொல்லை தந்த இம்சை எல்லாம்
தொலைவாய் போக நல்வழி செய்தா
வாழும் தெய்வமே-உன்
வாழ்நாள் கடனாளி நானே...
நாளும் உனை நினைத்து
நான் பாடும் தேசிய கீதமிது...
உன்மையான தியாகத்தின்
உருவம் என்றால் நீயம்மா...
உள்மனதிலும் ஊஞ்சல்கட்டி
உயிருள்ளவரை சுமப்பாயே...
ஆயிரம் உறவு வந்தாலும்
அகரம் என்றும் நீயம்மா...
ஆதவன் நிலவு மறைந்தாலும்
அந்த வானம் போல இருப்பாயே...
கவலை எனக்கிருந்தால்
கண்ணீர் உனக்கு வரும்...
புன்னகை எனக்கு வந்தால்
புத்துணர்ச்சி பெற்றிடுவாய்...
என் பசி தீர்ந்தால்
உன் பாதி வயிறு நிரம்பிவிடும்...
என் ருசி எதுவென்று
உன் நாக்கு மட்டும் நன்கு அறியும்...
பேரழகும் எனக்கில்லை...
பேரறிவும் எனக்கில்லை...
ஊரு கண்ணு படுமேனு
உச்சந்தலையை
ஆணவ நிலவே
ஆணவ நிலவே
அழிவது நீதானே- ஓடி
ஒழிவது நீதானே.
நீ வந்தா என்ன...
போனா என்ன...
எனக்கென்ன கவல-நீ
கணக்குல வரல...
விட்டு சென்றவளே
விரட்டி பிடிக்க- என்
வாழ்க்கை ஒன்றும் பந்தயம் அல்ல..!
தோற்ற காதலை
தோன்டி எடுக்க- என்
இதயம் ஒன்றும் கல்லறை அல்ல..!
உளி பட்ட கல்லில்
உருவம் தெரியும்
வலி பெற்ற காதலால்
வாழ்க்கையே அறிந்தேன்..!
அலையில்லா கடலிலும்
அழகு தெரியும்
நிலையில்லா காதலால்
நிரந்தரம் அறிந்தேன்..!
நிலவில்லா இரவில்
நித்திரை வராதா..?
மலரில்லா செடிகள்
மண்ணிலே வாழாதா..?
பாலைவன நாட்டில்
பனிமழை போல
வாடிய வாழ்க்கையிலும்
வசந்தங்கள் பொழ
கண்ணங்களே கண்ணீரால் நனைத்துவிட்டு
எண்ணங்களே எழுத்தால் இனைத்துள்ளேன்
என் தோழியே இதை வாசிப்பாயா...
என்னை பற்றியும் யோசிப்பாயா...
நீரில்லா நிலம் போல
நீயில்லாமல் வாடுகிறேன்...
வேரில்லா மரம் போல
வேதனையுடன் வாழுகிறேன்...
பூஜை செய்த கோவில்
பூகம்பத்தில் புதைவது போல
ஆசை கொண்ட என் மனமோ
அனுஅனுவாய் சிதையுதடி...
என் காதல் வானத்திலே
கண்ணீர் மழைதான் பொழியனுமா...
என் கனவுகள் அனைத்திலும்
கவலைகள் மட்டும்தான் ஆளனுமா...
காட்டாறு வெள்ளத்திலே
காகித கப்பல் என்ன செய்யும்..?
சாதி என்னும் சாக்கடையால்
சாகடிக்காதே என் காதலே..!
என் கனவுகளே
உன் காலடியில் வைத்து கெஞ்சுகிறேன்...
ஏற்றுக்கொள்வாய