ashok ak - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ashok ak |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-May-2014 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 1 |
கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே
..............................................................................
எதுகை மோனையில்
கவிதை வாழலாம்
ஏற்றத் தாழ்வுகளில்
கவிஞன் வாழ்கிறான்
............................................................................
கவிஞன் சொல்வதற்கும்
பிறர் ஏற்பதற்கும்
இடையில் பிரபலம்
ஒன்று நிற்கிறது
.........................................................................
கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான்
...............................
கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே
..............................................................................
எதுகை மோனையில்
கவிதை வாழலாம்
ஏற்றத் தாழ்வுகளில்
கவிஞன் வாழ்கிறான்
............................................................................
கவிஞன் சொல்வதற்கும்
பிறர் ஏற்பதற்கும்
இடையில் பிரபலம்
ஒன்று நிற்கிறது
.........................................................................
கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான்
...............................
பொய்கள் பேசுகிறது
வானம்
அழகழகாய் பல ஓவியங்களை
தீட்டி
ரசனைகளை தூண்டிவிட்டு
ரசித்திருக்கும் வேளையில்
அட போ என
அழித்து விடுகிறதே
எத்தனை எத்தனை
ஓவியங்கள்
சீராட்டும் தாய்
பாராட்டும் தந்தை
இடைக்கால காதல்
வசந்தம் போன்ற நட்பு
என எத்தனையோ அழகோவியங்கள்
கண்முன்பே அழிபடுகிறதே
எதை உணர்த்துகிறது
அந்த கடக்கும் மேகங்கள்
இதுதான் வாழ்வென்றா
இல்லை
இதில்தான் வாழ்வென்றா
பிரிவுகளை உறுதி செய்யும்
உனக்கு மறதி வரக்கூடாதா
காலமே இவ்வோவியங்கள்
காலமுள்ளவரை வாராதா
அருகருகே இருந்தும்
முகம் பாரா வலிமை கொண்டாய்
என்னுள் நானறியா
வலியை தந்தாய்
தவறிழைத்ததாரோ......?
தடுமாறி விழுகிறேன் நானோ
ஏதுமில்லை என்றாயே என்னுள்
யாதுமாகி நின்றாயே
வலிகள் புதிதல்ல எனக்கு
இருந்தும்
இவ்வலி தான் புதிதாய்
இருக்கு
அன்றாட பாதையில்
வழிமாறி போகிறேன்
அடக்கி வைத்து பார்த்தும்
விழித்தூறல் காண்கிறேன்
வெறுமை தனை பரிசாக
கொடுத்து விட்டு
உரிமை தனை பறித்துச்
செல்கிறாயே
காதல் வலி சிறிது
அடே நண்பா நட்பின்
வலி கொடிது
உணர்ந்தேனடா
வீதிக்கு விலை சொல்லும்
கூட்டத்தின் கண்களில்
தேவதை தேவை விளம்பரம்
பட்ட பகலில்
முக்காடிட வைக்கும்
பாழும் சமூகம்
அழிந்த காதலில்
எஞ்சிய எச்சங்களின்
கூற்றாய் வக்கிரப் பேச்சுக்கள்
எட்டி நடந்தால்
ஓரடி இழுத்து அறையத்
தூண்டுகிறது தன்மானம்
வருத்துகிறவர்களுக்கு எல்லாம்
பற்கள் பதம் பார்க்கப்படுமென்று
பத்திரிகை வைத்தல் முறையாகுமோ
சதை தின்னும்
கண்களுக்கு இரையாக்கிட
நீ கழுகில்லை
விலை ஒட்டிக்கொண்டு
வாழ்வதற்கு நாங்கள்
மரணிக்கவில்லை !
பிறந்திருக்கிறோம்!!
உங்களில் யாராவது
மனிதன் என்றால்
பின்னால் வராதீர்!
இணைந்து பார்!!
மகன் : நம்பிக்கைன்னா என்னம்மா?
அம்மா: சம்பளம் வரும்போது வர்றது. . .
மகன் : வாடிக்கைன்னா என்னப்பா?
அப்பா : வட்டி குடுக்க,வாங்க போயிட்டு வர்றது. . .
மகன் : கேளிக்கைன்னா என்னம்மா?
அம்மா : அது தியேட்டருக்கும்,ஹோட்டலுக்கும் போறது. . .
மகன் : ம் ம்..ம்ம் ..அப்ப வாழ்க்கைன்னா என்னப்பா?
அப்பா : இது மூணையும் பக்காவா பிளான் பண்ணி பண்றதுதாண்டா என் செல்லம்...
மகன் : ஹைய்ய்...அப்ப எனக்கு எப்ப சம்பளம் வரும்?
அம்மா & அப்பா : ?!?!?!?!?!?!??
கண் கண்ணாடிகளின்
விற்பனைக் கூடங்கள் இன்றைய
பள்ளிக்கூடங்கள்
வெளிநாட்டில் உழைக்க மனித
எந்திர தயாரிப்பு நிறுவனங்கள்
கல்லூரிகள்
இந்தியாவின் மானங்கெட்ட குடிமகன்
அமெரிக்காவில் சாப்ட்வேர்
இன்ஞினியர்
உனக்கென்னடா வந்தது
ஆம் உன் படிப்பிலும் எங்கள்
வரிப்பணம்
உயிர்பூக்கள் மலர்ந்திட உருபெற்ற உணர்விது
உயர்பூக்களாய் வளர்கையில் மணம் கொடுக்க வலியது
உதிர்கின்ற வலியிலும் சுகம் கொடுக்கும் வழியிது
உடல் மறைந்து போயினும் நிலைக்க இடம்பிடிக்கும் செயலிது
சாதிதன்னை தூக்கியே சாக்கடையில் எறிவது
சாதியென்று உன்னையே சிகரமேற வைப்பது
மதபேதம் இன்றியே மனதை மட்டும் பார்ப்பது
மதம்பிடித்த செடியிலும் மனிதம் பூக்க செய்வது
கருவிலுன்னை சுமக்கையில் தாயுள் தோன்றும் குணமிது
வளருமுன்னை பார்க்கையில் தகப்பன் கொள்ளும் மகிழ்விது
கோபமோடு அவளடிக்கையில் தங்கையென பொறுப்பது
சாயும் நேரம் வருகையில் உறவை தோள் கொடுக்க வைப்பது
இரத்தம் சிந்த பார்க்கையில் இரக்கம் என்ற