அழகர் ராமர் - சுயவிவரம்
(Profile)
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : அழகர் ராமர் | 
| இடம் | : ELUMALAI (MADURAI) | 
| பிறந்த தேதி | : 12-Jul-1985 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 09-Feb-2012 | 
| பார்த்தவர்கள் | : 178 | 
| புள்ளி | : 31 | 
            
        வேதியியலில் டாக்டர் பட்டம் முடித்தாயிற்று. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்.  பார்ப்பது ரசிப்பது நினைப்பது அனைத்தையும் என்னால் முடிந்த அளவு கவிதையாக எழுதுகிறேன்...
      
ஆடி போனபின் ஆவணி 
என் பெண்ஜாதியே 
உனக்காகக் காத்திருக்கிறேன் நான் 
எங்கே இருக்கிறாய் நீ ...
ஒவ்வொரு பூவாய் எடுத்தெடுத்து 
சரஞ்சரமாய் கோர்த்துக்கோர்த்து 
மாலை ஒன்று கட்டுகின்றேன் 
மணமாலை ஒன்று  கட்டுகின்றேன் - அதில் 
உன் பெயரெழுத விரும்புகின்றேன் நான் 
எங்கே இருக்கிறாய் நீ ...
இல்லற  வாழ்க்கையை 
இனிமையாக வாழ்ந்திட -இங்கே 
இரவும் பகலும் - உன் 
அறியாத  முகம் நினைத்து 
அகத்தில் காதல் கொண்டு 
அணுவணுவாய் ரசித்துக் கொண்டு 
நினைத்து நினைத்து உருகிக்கொண்டிருக்கின்றேன் நான் 
எங்கே இருக்கிறாய் நீ ...
மாமன் பெண்பார்க்க வருவானென்று 
முகம் சிவக்கும் மாலைப் பொழுதினிலே -சீவிச்சிங்காரி
ஆடி போனபின் ஆவணி 
என் பெண்ஜாதியே 
உனக்காகக் காத்திருக்கிறேன் நான் 
எங்கே இருக்கிறாய் நீ ...
ஒவ்வொரு பூவாய் எடுத்தெடுத்து 
சரஞ்சரமாய் கோர்த்துக்கோர்த்து 
மாலை ஒன்று கட்டுகின்றேன் 
மணமாலை ஒன்று  கட்டுகின்றேன் - அதில் 
உன் பெயரெழுத விரும்புகின்றேன் நான் 
எங்கே இருக்கிறாய் நீ ...
இல்லற  வாழ்க்கையை 
இனிமையாக வாழ்ந்திட -இங்கே 
இரவும் பகலும் - உன் 
அறியாத  முகம் நினைத்து 
அகத்தில் காதல் கொண்டு 
அணுவணுவாய் ரசித்துக் கொண்டு 
நினைத்து நினைத்து உருகிக்கொண்டிருக்கின்றேன் நான் 
எங்கே இருக்கிறாய் நீ ...
மாமன் பெண்பார்க்க வருவானென்று 
முகம் சிவக்கும் மாலைப் பொழுதினிலே -சீவிச்சிங்காரி
அறிவியலாளர்கள் எப்படி மறந்தார்கள்...
பூக்களின் வரிசை பட்டியலில்  
உன் புன்னகையைச் சேர்க்க....
அம்மான்னு சொல்றத விட 
ஆத்தான்னு சொன்னாதான்
வாய் நிறைய கூப்பிடுரானு நெனப்பா
என் ஆத்தா ...
சாயங்கால நேரம் -இரவுக்கு 
சமைக்கப் போகும் முன்பு 
லேசாப் பசிக்குதுன்னு சொன்னா
தட்டாங்காய் பிடுங்கி 
ஆவிபறக்க அவிச்சுப் போடுவா தட்டுல..அது மட்டுமா
சூடாக் களி கிண்டி 
கருவாட்டுக் குழம்பும் வச்சு
கரண்டியில எடுத்து வச்சா
வயிறு நெரஞ்சாலும் ருசி குறையாது
மறுநாள் விடியுற வரைக்கும்...
அலுக்க வேலை செஞ்சுட்டு 
ஆத்தா பக்கம் வந்து உக்காந்தா
கம்மங்கூல் கரைச்சுக் குடுப்பா
கடுச்சுக்க வெள்ளக் கட்டியும் 
தொட்டுக்க  பூண்டு ஊறுகாயும் ...
உடம்பு சரி இல்லன்னு படுத்துக் கிடந்தா
நிம்மதி இல்லாம தவிப்பா எ
அம்மான்னு சொல்றத விட 
ஆத்தான்னு சொன்னாதான்
வாய் நிறைய கூப்பிடுரானு நெனப்பா
என் ஆத்தா ...
சாயங்கால நேரம் -இரவுக்கு 
சமைக்கப் போகும் முன்பு 
லேசாப் பசிக்குதுன்னு சொன்னா
தட்டாங்காய் பிடுங்கி 
ஆவிபறக்க அவிச்சுப் போடுவா தட்டுல..அது மட்டுமா
சூடாக் களி கிண்டி 
கருவாட்டுக் குழம்பும் வச்சு
கரண்டியில எடுத்து வச்சா
வயிறு நெரஞ்சாலும் ருசி குறையாது
மறுநாள் விடியுற வரைக்கும்...
அலுக்க வேலை செஞ்சுட்டு 
ஆத்தா பக்கம் வந்து உக்காந்தா
கம்மங்கூல் கரைச்சுக் குடுப்பா
கடுச்சுக்க வெள்ளக் கட்டியும் 
தொட்டுக்க  பூண்டு ஊறுகாயும் ...
உடம்பு சரி இல்லன்னு படுத்துக் கிடந்தா
நிம்மதி இல்லாம தவிப்பா எ
கரிய இரவைக் கொன்று தின்று 
உதிக்கின்றது ஒரு வெம்மைச் சூரியன்
திரள்  மேகத்தைக் கிழிக்கையிலே 
கொட்டுகின்றது ஒரு குளிர் மழை 
வீரியத்துடன் விதையை அழித்து 
துளிர்க்கின்றது ஒரு பச்சைத் தளிர் 
பிரசவ வலியின் முடிவிலே 
ஜனிக்கின்றது ஒரு சிறு ஜீவன் 
நீண்டதொரு மௌனத்தை உடைக்கையிலே 
ஊற்றெடுக்கின்றது  ஒரு உன்னத காதல் 
உயிர்க்  காதலின் முறிவிலே 
உணரப்படுகின்றது ஒரு உண்மை நட்பு   
பாறையின் தூக்கத்தைத் தட்டி எழுப்புகையிலே 
விழிக்கின்றது ஒரு கவின் சிற்பம் 
பட்டுப் பூச்சிகளின் மரணத்திலே   
பிறக்கின்றது ஒரு மணப் பட்டு 
 
பருவத்தின் அறியாமையை இழக்கையிலே 
பூக்கின்றன நற்பண்புகளும் பொறு
நீ கொடுக்கும் முத்தங்களுக்காகவே 
நான் எப்போதும் இருப்பேன்....
மௌனமாக...
அறிவியலாளர்கள் எப்படி மறந்தார்கள்...
பூக்களின் வரிசை பட்டியலில்  
உன் புன்னகையைச் சேர்க்க....
பட்டணம் போய் சினிமாக் கொட்டகையில்
படம் பார்க்கணும்'னு சொன்னா - அதுவும்
புரட்சி கலைஞர் படம்'னு சொன்னா
பணம் கொடுத்து அனுப்புவாரு - எங்கப்பா
திண்பண்டத்துக்கு என்னண்ணா பண்றது....
என்னயும் பாரு என் சிரிப்பையும் பாரு'னு 
பல்லைக்காட்டி நிக்கிதுக
பருத்திச் சுளைக
ஆள் உயரம் வளர்ந்த பருத்திக்காட்டுக்குள்ள
நம்ம உயரமா தெரியப் போகுது
ஒளிஞ்சு ஒளிஞ்சு எடுத்தோம் 
ஒவ்வொரு சுளையா...... 
அண்ணன் அரைக்கால் சட்டை - பெரிய பை
அரைக்கிலோ தாங்கும்
தம்பிக்கு கால்கிலோ தாண்டாது
காரச்சேவா பட்டாணியா
தம்பிக்கு பிடித்த பட்டாணி
தனக்கும் போதும்'னு வாங்கிட்டான்..அண்ணன்
ஓட்டமும் நடையுமா...கிளம்பிட்டாங்க
அண்ணனும்